Saturday, October 29, 2011

நினைவுக் காவிரியில் ஒரு பயணம்

நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது ஒரு காரணமும் இன்றி, பரணில் என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது! அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.

விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த, பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன். மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த மரத்தில் நிழல் நீண்டிருந்தது, சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில் நிழலாடினாள். பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன், மையிட்ட கண்களுடன் கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச் சத்தமும், இப்போது நனவு போலவே!

அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களை தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று புராதன எலும்புகள் போல தோன்றின. உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ் சீட்டு காலை நெருடியபோது வீட்டு வெராண்டாவில் டிரம்ப்ஸ் (Trumps) சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை, துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதியது.

குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக வாசனை பார்த்தேன். ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க, அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது ஞாபகமும், “இன்னொரு காபி குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும், காலை வேளைகளில் சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் தவழ்ந்த, அம்மாவின் பிரத்யேக காபி மணமும் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது. இந்த வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!

பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று கண்டபடி வளர்ந்திருந்தன, குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில் இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக இதமாக இருந்தது. துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப் பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீப சுத்தத்திற்கும் அத்தாட்சியாக இருந்தது.

சட்டைப்பையில் பிளாக்பெர்ரி கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!

அன்புடன்
பாலா

Sunday, April 03, 2011

உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா


முதல் முறை டாஸ் செய்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், மீண்டும் செய்த டாஸில் சங்கக்காரா வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்! இந்திய மீடியா சங்கக்காரா ஏமாற்றியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது ! எதிர்பார்த்தது போல, நெஹ்ராவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த் மோசமாக பந்து வீசினார். பெரிய இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒரு முக்கிய ஆட்டத்தில் ஆட நேர்ந்தால் இப்படி ஆகலாம் என்பதும் எதிர்பார்த்தது தான்! சாகீரின் நிபுணத்துவம் (அவரது முதல் 3 ஓவர்களும் மெய்டன்கள்!) முதல் 10 ஓவர்களில், இலங்கை பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தரங்காவின் விக்கெட்டையும் சாகீர் வீழ்த்தினார், 31/1. இந்த உலகக்கோப்பையில் முதல் பவர் பிளேயில் இலங்கை எடுத்த மிகக் குறைவான ரன்கள் இது.

The initial phase belonged to India. இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை இழந்து 18 ஓவர்களில், தத்தி தத்தி 65 ரன்களை எடுத்திருந்தது. தங்கள் மிடில் ஆர்டர் அத்தனை பலமானதில்லை என்பதை உணர்ந்து, சங்கக்காராவும், ஜெயவர்த்தனேயும் கவனமாக ஆடினாலும், ரன்கள் steady-ஆக வந்த வண்ணமிருந்தன. யுவராஜ் பந்துவீச்சில் சங்கக்காரா விக்கெட் இழந்தபின் (122/3, 28 ஓவர்கள்) மஹிளா தனது அனைத்து அனுபவத்தையும் ஆட்டத்தில் கொணர்ந்து ஆடியது தான் இலங்கை இன்னிங்க்ஸின் ஹைலைட்! அவரது touch play மற்றும் பந்தை ஃபீல்டர்களுக்கு நடுவே நுணுக்கமாக செலுத்தும் திறன் ஆகியவை அவர் ஒரு world class batsman என்பதை நிரூபித்தன.

நடு ஓவர்களில் ஹர்பஜன், முனாஃப், யுவராஜ் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதால், 45 ஓவர்கள் முடிந்தபோது, ஸ்கோர் 211/5. யுவராஜ், சாகீர் தலா 2 விக்கெட்டுகள், ஹர்பஜன் 1. இந்த உலகக்கோப்பையில், முதன்முதலாக சாகீரின் "death-overs" பந்து வீச்சு மிக மோசமானதாக அமைந்து விட்டது நமது துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும். Length ball, full toss என்று வீசியதில், மட்டையை சரியாக பிடிக்கத் தெரியாத குலசேகரா, ஃபெரெரா போன்றவர்கள் விளாசியதில் 5 BPP ஓவர்களில் (46-50) 63 ரன்கள் கிட்டின! யாருமே எதிர்பார்க்காதது இது! மஹிளா 48வது ஓவரில் சந்தடியில்லாமல், தனது சதத்தை எட்டினார்.

இலங்கையின் மொத்த ஸ்கோர் 274. தனது முதல் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே தந்த சாகீர், அவரது இறுதி 3 ஓவர்களில் 44 ரன்கள் வாரி வழங்கியதை Absolute Shocker என்று தான் கூற வேண்டும்!! ஆடுகள நிலைமை பெரிய அளவில் மாறாத சூழலில், 275 என்பது நமது பேட்டிங்கை கொண்டு துரத்தவல்ல இலக்காகவே தோன்றியது. மிதமான பயமும், ரென்ஷனும் வயிற்றைக் கவ்வியிருந்ததென்னவோ உண்மை தான் :-)

இந்தியா பேட்டிங்:
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இறுதியாட்டத்தில் எந்த அணியும் வெற்றிகரமாக துரத்தாத ஓர் இலக்கை அடைய ஒரு நல்ல துவக்கம் மிக அவசியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கும். சச்சின், சேவாக் இருவரில் ஒருவர் ஒரு 'பெரிய' நூறு எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று டிவிட்டரில் நானே பதிவு செய்திருந்தேன்! ஆனால், இன்னிங்ஸின் முதல் மலிங்கா ஓவரில், சேவாக் எல்.பி.டபிள்யு :(

சேவாக் ஒரு 3-4 ஓவர்களுக்குப் பிறகு (அதான், முதல் பவர் பிளேயில் 10 ஓவர்கள் இருக்கின்றனவே!) shuffle across செய்து leg side-ல் பவுண்டரி அடிக்க முயல்வது நல்லது, அல்லது, inside out ஷாட் கூட ஆடுவது இதற்கு பரவாயில்லை! சச்சின் குலசேகரா ஓவரில் 2 பவுண்டரிகள் effortless ஆக அடித்தது நம்பிக்கையைத் தந்தாலும் மலிங்காவின் பந்து வீச்சில் 7வது ஓவரில் சங்கக்காராவுக்கு கேட்ச் கொடுத்து விக்கெட்டிழந்தார் :( அரங்கை மயான அமைதி கவ்வியது, உண்மையில் எனக்கும் நம்பிக்கை போய் விட்டது! ஸ்கோர் 32/2

ரென்ஷன் சற்று அதிகமாக இருந்ததால், பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பர் வீட்டுக்குச் சென்றேன் (நண்பர் பெயர் பிள்ளையார்!) அர்ச்சகரும் கிரிக்கெட் ஆர்வலர். 2 விக்கெட்டுகள் காலி என்று நான் கூறியவுடன், துளியும் நம்பிக்கை இழக்காமல், "சச்சின், சேவாக் மட்டும் தான் இந்திய அணியா? இன்னிக்கு கம்பீர் 100 அடிப்பார். கோலியும், தோனியும் கூட நிச்சயம் அசத்துவார்கள், வெற்றி உறுதி, நாளைக்கு வந்து சொல்லுங்க!!!" என்று அசால்டாக கூறினார். அவர் சொன்னது போலவே, கௌதியும், கோலியும் பெரிய அளவிலான அழுத்தத்தை உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக ஆடினர் என்றால் அது மிகையில்லை. அதே நேரம், ரன்கள் எடுத்த வண்ணம் இருந்ததால், ரன் ரேட் 5.5 க்கு குறையவில்லை.

மீண்டும் ஒரு திடுக் திருப்பம். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, தில்ஷனின் படு சுமாரான பந்து வீச்சுக்கு அவுட்டானார். ஸ்கோர் 115/3 (22 ஓவர்கள்). யுவராஜுக்கு பதில், 'கப்தான்' தோனி களமிறங்கினார்! முரளி, ரந்திவ், தில்ஷன் என்று 3 off spinners இலங்கை அணியில் இருந்ததால், இடது கை ஆட்டக்காரர் யுவராஜை (மற்றும் ரெய்னாவை) துரத்தலின் இறுதிக்கட்டத்துக்கு வைத்திருப்பது நல்லது என்று தோனி கருதியிருக்கலாம். மேலும், இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் களத்தில் ஆடுவதும் நல்லது தானே! Dhoni mentioned later that he wanted to take responsibility in that crunch situation and guide the team closer towards the target.

ஃபார்மில் இல்லாத காரணத்தால், தொடக்கத்தில் தோனியின் ஆட்டத்தில் மிகுந்த கவனம் தெரிந்தது. ஆனால், கம்பீர் ஆடிய விதம் கேப்டனுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். 1-டவுனில் கம்பீர் ஆடுவது இந்திய அணிக்கு ஒரு வரப்பிரசாதம்! சுழற்பந்து/வேகப்பந்து என்று இரண்டையும் சுலபமாக கையாள்வதுடன், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், ரன் சேர்ப்பதில் தேக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது கம்பீரின் Speciality! சங்கக்காராவின் பந்துவீச்சு மாற்றங்கள் பலன் எதுவும் தரவில்லை. இதற்கு முரளி (உடல் நிலை காரணமாக) off colour ஆக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம். கம்பீரும் தோனியும் முரளியில் tricksக்கு ஒத்துழைப்பு தர மறுத்து கவனமாக ஆடியதும் மற்றொரு காரனம் :-) அஜந்தா மென்டிஸ் இல்லாததும் ஒரு குறையே.

முக்கியமான ஆட்டத்தில், உலகக்கோப்பையில் தனது முதல் அரைச்சதத்தை (52 பந்துகள்) தோனி பதிவு செய்தார். ஃபார்மில் இல்லாத நிலையில், playing under great pressure, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை கடினமாக இல்லாவிட்டாலும் கூட, தோனியின் இந்த ஆட்டம் மிக்க பாராட்டுக்குரியது! அதற்காக, முந்தைய ஆட்டங்களில் தோனி செய்த சில சொதப்பல்களை நான் விமர்சித்தது, தேசியத்துக்கு எதிரான குற்றம் என்று ஒரு சில தோனி ரசிகர் மன்ற pseudo-patriotic தொண்டரடிப்பொடிகள் பொங்கினால், நான் என்ன செய்ய! தோனியே கூட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஆடுகளத்தை சரியாக கணிக்கத் தவறியதை ஒரு பேட்டியில் கூறியிருந்ததை நினைவு கூர்கிறேன்.

ஒரு Gem of an innings ஆடிய கௌதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்க வல்ல சதத்தை தவறவிட்டது வருத்தத்தைத் தந்தது. 97 ரன்களில், அதுவும் ஃபெரெராவின் உருப்படாத பந்துவீச்சில், அடிக்கப் போய், அனாவசியமாக ஆட்டமிழந்தார்! Gambir actually deserved that glory for the calmness he displayed under pressure & the way he anchored the Indian innings in a make or break situation after the cheap dismissal of both Sachin and Sehwag! யுவராஜ் களமிறங்கினார்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. கடைசி 5 (பவர் பிளே) ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 30 ரன்களே தேவை என்ற நிலையில், தோனியின் அதிரடித் தாக்குதலில் 48.2 ஓவர்களிலேயே ஒரு சிக்ஸர் வாயிலாக, மகத்தானதொரு வெற்றியும், 28 வருட காத்திருப்புக்குப் பின் உலகக்கோப்பையும் இந்தியாவின் வசம் வந்தது!!!! தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது பணியை செவ்வனே செய்து முடித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. It was good that Dhoni finished the job himself without expecting others below to achieve the victory. இந்த வெற்றியின் மூலம், கபில்தேவின் தனிமையும் விலகியது :) இந்தியாவே விழாக் கோலம் பூண்டது! எனது தெருவில் ஒரு 10 நிமிடங்களுக்கு இடைவிடாத வேட்டுச்சத்தம்!

சச்சின் இந்த வெற்றியை தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான/பெருமையான தருணம் என்று கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! 20 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் 6வது முயற்சியில் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த உலகக்கோப்பை! ஆட்ட நாயகன் தோனி, அந்த விருதை கம்பீருடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்! இதை ஒரு குறையாக கூறவில்லை. யுவராஜ் உலகக்கோப்பைத் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு சமயத்தில், இந்திய அணியிலிருந்த விலக்கப்பட்டு, (முக்கியமாக) உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட யுவராஜுக்கு இதை விட என்ன பெருமை இருக்க முடியும்!!!

Tail piece:
இந்தியாவுடன் கம்பேர் செய்தால், ஸ்ரீலங்கா அணியில் சங்கக்காரா, மஹிளா, முரளி, மலிங்கா தவிர்த்து மற்றவர் ஒப்புக்குச் சப்பாணிகள் என்பதால் தான், அதை சுமாரான அணி என்று முன்னர் எழுதினேன். இவர்கள் நால்வரிடமும் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்றும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்! அது போலவே, முரளி தவிர மற்ற மூவரும் பரிமளித்ததால் தான், இந்த இறுதி ஆட்டம் மிக சுவாரசியமான ஒன்றாக அமைந்தது!

இந்த உலகக்கோப்பை கனவு நனவானதற்கு, இந்திய அணியின் (துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாத!) பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் அபாரமான பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்! 2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை அரவணைத்து, பல கஷ்டங்களை சமாளித்து, திட்டங்களை வகுத்து, இந்த உலகக்கோப்பை உச்சத்தை அடைய (அப்பாடா, இடுகை தலைப்பு இடுகையில் வந்தாச்சு ;)) அடி கோலிய இவரை Gary Potter என்று அழைக்கலாம் :-)

In the final conclusion, both MS Dhoni and SR Tendulkar are Destiny's Children and realization of this World Cup Dream is just testimony to that ever lasting fact !!!

Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

http://balaji_ammu.blogspot.com

Saturday, April 02, 2011

India vs Pakistan - மொஹாலி மஹாயுத்தம்



ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்துக்கு உண்டான எல்லா அம்சங்களும் கொண்டதாக (ஸ்ரீலங்கா ஆடிய உலகமகா மொக்கை காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் போல அல்லாமல்) இந்தியா-பாக் அரையிறுதி ஆட்டம் இருந்தது என்றால் அது மிகையில்லை! இந்த ஆட்டத்திற்கு முன்னால் இந்திய மீடியா அரங்கேற்றிய கூத்துகள் சுவாரசியமாக இருந்தன. ஆட்டத்தைப் பார்க்க இந்தியப் பிரதமர், பாக் பிரதமர் கிலானியை அழைத்திருந்தது கண்டு, பால் தாக்கரே அஜ்மல் கசாபையும் அழைக்க வேண்டியது தானே என்று சாம்னாவில் காய்ச்சியிருந்தார் :) இந்திய அரசின் இந்த கிரிக்கெட் diplomacy-யால் ஒரு எழவு பயனும் இருக்காது என்பது நிதர்சனமான ஒன்று தான்!

சமபலம் வாய்ந்த இரு அணிகள் சந்தித்த ஆட்டம் என்று சொல்லலாம். இந்தியாவின் பேட்டிங் வலிமையை compensate செய்யும் வகையில் பாக் அணியின் பந்துவீச்சு திறமையான ஒன்று என்பதால் தான் சமபலம் என்கிறேன். அஷ்வினுக்கு பதிலாக, சற்றே நம்பிக்கை தளர்ந்த நிலையில் இருக்கும் நெஹ்ராவை தேர்வு செய்திருந்தது, ரிஸ்க்கானது என்று டிவிட்டரில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னமே அபஸ்வரம் கேட்க ஆரம்பித்து விட்டது ;) தோனியின் பக்கம் அதிர்ஷ்டமிருந்தது, டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

3வது ஓவரில் சேவாக் புயல் மொஹாலியைத் தாக்கியதில், உமர் குல் காணாமல் போனார் :) 5 பவுண்டரிகளும் tracer bullets! ஆனால், புயல் அதிகச் சேதத்தை ஏற்படுத்தாமல், வீரியம் இழந்தது! ஸ்கோர் 49/1 (6 ஓவர்கள்). விக்கெட் எடுத்தது, சின்னப்பையன் வஹாப் ரியாஸ். சச்சின் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்தாலும்,for a change, தன் விக்கெட்டை இழப்பதற்கு கடுமையாக போராடியும் (இதுவரை 2 lifes, 2 referrals) பாக் ஃபீல்டர்கள் ஒத்துழைக்கவில்லை :) கம்பீர் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 116/2 (19 ஓவர்கள், RRR 6.10). வடிவேலு பாஷையில், எல்லாம் நல்லாவே போய்க்கிட்டு இருந்தது ;-)

22வது ஓவரில், சச்சினின் அரைச்சதம். வஹாப் வீசிய 26வது ஓவரில் double strike, கோலியும், யுவராஜும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்! யுவராஜுக்கு வீசப்பட்ட முதல் பந்து வேகமாக வீசப்பட்ட scorching inswinging yorker! ஸ்கோர் 145/4 (26 ஓவர்கள்). திருவாளர் தோனி ஃபார்மில் இல்லாத நிலையில், ஒரு fighting total (250+) வர வேண்டுமே என்று மிதமான ரென்ஷன் :) சச்சின் களத்தில் இருந்த நம்பிக்கையில், தோனி தன் விக்கெட்டை தக்க வைத்துக் கொள்ள தடவித் தடவி ஆடியது பார்க்க பரிதாபமாய் இருந்தது!

Sachin continued to live a charmed existence at the crease with 2 more dropped catches! ஒரு வழியாக, 85 ரன்கள் எடுத்த நிலையில், சச்சின் அதிர்ஷ்டம் காலாவதியாகி அஜ்மல் பந்தில் அவுட்! ஸ்கோர் 187/5 (37 ஓவர்கள், RRR 5.05). 6.10 என்றிருந்த ரன்ரேட்டை 5.05க்கு இட்டு வந்த பாக் பந்து வீச்சு பாராட்டுக்குரியது! ஃபீல்டிங் சொதப்பாமல் இருந்திருந்தால், இந்தியாவின் நிலைமை இதை விட மோசமாக போயிருக்கும்.

எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார். நம்பிக்கை தரும் வகையில் நிதானமாக ஆட ஆரம்பித்தார். பாக் தரப்பில் வஹாப் அபாரமாக பந்து வீசினார். அதோடு, அஃப்ரிடியும், அஜ்மலும் பந்து வீசியதிலிருந்து, ஆடுகளம் மெல்ல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்றாக மாறி வருவது கண்டு, அஷ்வினை அணியில் சேர்க்காதது தவறான முடிவாகவே தோன்றியது! 40 ஓவர்களில் ஸ்கோர் 200/5. தோனி ஃபார்மில் இல்லாவிட்டாலும், BPP எடுக்கப்படாத சூழலில், 275 என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது.

42வது ஓவரில் தோனியின் சிரமங்களுக்கு விடிவு பிறந்தது :) ஹர்பஜன் வேகமாக வந்தார், ஆனால் ரன்கள் வேகமாக வரவில்லை! 45வது ஓவரில் பேட்டிங் பவர் ப்ளே எடுக்கப்பட்டது. உமர் குல் மீண்டும் அடித்துத் துவைக்கப்பட்டதில், 46வது ஓவரில் 14 ரன்கள்! பவர் ப்ளே ஓவர்களில் இந்தியா எடுத்தது 43 ரன்கள். இந்தியாவின் மொத்தம் 260 ரன்கள். ரெய்னா (36 ரன்கள், 39 பந்துகள்) கடைசி வரை இல்லாமல் இருந்திருந்தால் 240 கூட தேறியிருக்காது. Raina's contribution was vital in the end.

பாக் இன்னிங்க்ஸ்: கம்ரானும், ஹஃபீஸும் களமிறங்கினர். 9வது ஓவரில், சாகீர் வீசிய மெதுவான பந்தில் ஏமாந்து கம்ரான் விக்கெட் இழந்தார். 16வது ஓவரில் ஹஃபீஸ் முனாஃப் பந்தில் காலி! ஸ்கோர் 72/2. யூனிஸ் கான் வந்தார். தோனியை விட பயங்கரமாக தடவினார் :) பலர் வாயில் விழுந்து புறப்பட்ட நெஹ்ரா சிறப்பாக பந்து வீசியது குறிப்பிட வேண்டியது, 5-0-19-0.

தங்ககரத்தின் சொந்தக்காரர் யுவராஜ் ஷஃபீக்கை வீழ்த்தினார்! 24 ஓவர்கள், ஸ்கோர் 103/3, தேவையான ரன்ரேட் 6-ஐத் தொட்டது! In the 26th over, Yuvi ended the Younis Khan's miserable tenure (13 off 32 balls) at the crease :) யுவராஜ் 4-1-9-2 !!!! மற்றொரு பக்கத்தில், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தார். 7-0-31-0

30வது ஓவரில், "தானத்தில் சிறந்தது நிதானம்" என்பதை விடுத்து, உமர் அக்மல் யுவராஜை target பண்ணி, ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து, 'The game is ON' என்று அறிவித்தார்! அதற்கு நேர்மாறாக, மிஸ்பா உருப்படியில்லாமல் ஆடிக் கொண்டிருந்தார். 34வது ஹர்பஜன் ஓவர் ஒரு turning point, உமர் அக்மலின் ஸ்டம்ப் பஜ்ஜியின் தூஸ்ராவில் சிதறியது. இந்தியாவின் பந்து வீச்சும் மேம்பட்டுக் கொண்டே இருந்தது, முனாஃப் 8-1-29-1 ஹர்பஜன் 8-0-33-1. 36வது ஓவரில் ரன்ரேட் 8-ஐத் தொட்டது, ஸ்கோர் 148/5.

ஆடுகளம் பேட்டிங்குக்கு சிரமம் மிக்க ஒன்றாகவே இருந்தும், அஃப்ரிடி இன்னும் களமிறங்காத நிலையில், India cannot & should not relax என்பது தெளிவாக புரிந்தது. அப்துல் ரஸாக் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கவில்லை, முனாஃபுக்கு இன்னொரு விக்கெட், 9-1-33-2. அஃப்ரிடி களமிறங்கிய பின் ஆட்டம் மிக லேசாக சூடு பிடித்தது. தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றங்களும் மிக சிறப்பாக இருந்ததால், பாக் அணியின் மீது அழுத்தம் துளியும் குறையாமல் இருந்தது.

The game was effectively in India's hands when Afridi lost his wicket to Harbajan in the 42nd over! ஸ்கோர் 184/7. தேவையான ரன்ரேட் 9.62. மீண்டும் பந்து வீச வந்த நெஹ்ரா, தோனி அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வண்ணம், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது 10 ஓவர்களை பூர்த்தி செய்தார், 10-0-33-2. பந்து வீசிய ஐவரில், நெஹ்ராவின் பந்து வீச்சு தான் most economical என்பதை பதிவு செய்கிறேன்! அதே சமயம், எனது முந்தைய பதிவில், நெஹ்ராவை இந்த ஆட்டத்துக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைத்ததையும் பதிவு செய்து என் காலரை சற்றே தூக்கி விட்டுக் கொள்கிறேன் :-)

பேட்டிங் பவர் பிளேயில், மிஸ்பா மட்டையை பொழுதுபோக்காக சுழற்றியதில், ஒரு சில பவுண்டரிகள் வந்தும், பாக் 49.5 ஓவர்களில் 231-க்கு ஆட்டமிழந்தது. இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை T-20 இறுதியாட்டம் போலவே, மிஸ்பாவுக்கு இது இன்னொரு "மிஸ்" பா :) இந்தியா 3வது முறையாக உலகக்கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது! ஸ்ரீலங்கா சுமாரான அணிகளை வென்று இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவ்வணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, முரளி, மலிங்கா ஆகிய நால்வரிடம் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
( படம் : நன்றி தினமலர் )

Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்

நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக் செமிஃபைனல் ஆட்டம் பயங்கர பரபரப்பை எல்லா தளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது!. மீடியா இதை மூன்றாம் உலகபோருக்கு ஒரு curtain raiser அளவுக்கு ஏற்றி விட்டிருப்பது மகா கொடுமை. அது போல, பிரதமரே இந்த ஆட்டத்துக்கு வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காசு கொடுத்து டிக்கட் வாங்கிய பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது!! இது போதாதென்று, இந்தியப்பிரதமர் பாக் பிரதமரையும், ஜனாதிபதியையும் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்! ஒரு பேட்டியில், சஷி தரூர் கிரிக்கெட்டை மட்டும் கிரிக்கெட்டர்கள் பார்த்துக் கொண்டால் போதும், இந்திய-பாக் பிரச்சினைகளை (இரு நாட்டு பிரதமர்கள்) Statesmen கவனித்துக் கொள்வார்கள் என்றார்! சஷி statesmen என்றால் "மாநில மனிதர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொண்டாரோ என்னவோ !?!

இன்னும் சில முக்கிய அரசியல்வாதிகளும் மொஹாலிக்கு செல்லவிருக்கிறார்கள். இவர்கள் டிவியில் ஆட்டத்தை பார்த்துத் தொலைத்தால் என்ன? இவர்கள் பயணத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்கள் பணம் கோடிகளில் விரயமாவதை தவிர்க்கலாமே! இது போன்ற சின்ன விஷயங்களை யோசித்துப் பார்த்து செயல்படக் கூட ஏன் அரசியல்வாதிகளுக்குத் தோன்றுவதில்லை? :-( இவர்களும் தத்துபித்து மீடியாவும் ஏன் எல்லாவற்றிலும் அரசியலை நுழைத்து நாறடிக்க வேண்டும்???

பாக் உள்துறை அமைச்சர், பாக் அணியை fixing-ல் ஈடுபடவேண்டாம் என்று எச்சரித்திருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாக் அணியின் fixing வரலாறு அத்தகையது! பாக் அணியினரை சத்திய சந்தர்களாக எண்ணிக் கொண்டு இம்ரான் கான் அமைச்சருக்கு எதிராக பொங்குவது சற்று அதீதமாகப் பட்டது! சரி, மேட்டருக்கு வருவோம்.

மொஹாலி ஆடுகளம் வேகத்துக்கும், bounceக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. அதோடு, ஆடுகளத்தின் கெட்டியான களிமண் காரணமாக பந்து அவ்வளவாக சுழலாது, skid ஆகும் அபாயம் உள்ளது! அதனால், அக்தர், உமர் குல், அஃப்ரிடி ஆகியோரைக் கொண்ட பாக் அணி பந்து வீச்சுக்கு இது சற்று அனுகூலமாக அமையும் என்றாலும், நமது ஜாம்பவான் மட்டையாளர்கள் அதை திறமையாக எதிர் கொள்வார்கள் என்று நம்பலாம் :) நமது தரப்பில், சாகீரும், அஷ்வினும் இந்த ஆடுகளத்தில் நிச்சயம் பரிமளிப்பார்கள்.

மொஹாலியில் இதற்கு முன் நடந்த 9 ஆட்டங்களில் 2 முறை தான் 300+ ஸ்கோர்கள் சாத்தியமாகியிருக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும், இந்தியா டாஸில் வென்று, முதல் மூவரில் ஒருவர் சதமும், மிடில் ஆர்டரில் ஒருவர் அரைச்சதமும் எடுத்தால், 300-ஐ சுலபமாக எட்டி விடலாம்! 280 என்பது ஒரு competitive இலக்காக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். மாலை நேரப்பனி புல்லின் மேல் தங்கும் காரணத்தால், 2வதாக பந்து வீசும் அணிக்கு ஈரம் காரணமாக பந்தை கிரிப் செய்வது சற்று கடினமாக இருக்கும். காற்று அதிகம் வீசினால், அவ்வளவு பிரச்சினை இருக்காது. மைதானத்தில் புல்லை குட்டையாக வெட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

முனாஃபுக்கு பதிலாக, நெஹ்ராவை சேர்ப்பது அத்தனை மோசமான ஒரு தேர்வாகத் தோன்றவில்லை. சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)

Tail piece: Based on the performance, இந்திய அணியை விமர்சித்து எழுதுவதால், இந்தியா தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவதாக அர்த்தமாகாது. அந்த விமர்சனத்துக்கு எதிராக கருத்துகளை முன் வைப்பதை விடுத்து, "மேரா பாரத் மஹான்", "ஸாரே ஜஹான்ஸே அச்சா" என்று பாய்ந்து பிறாண்டுவதால் யாருக்கும் பயனில்லை!

எனக்குப் பிடிக்காத ஸ்ரீலங்கா அணி செமி ஃபைனலில் வென்றிருப்பதால், அந்த ஆட்டம் குறித்து எழுத ஆர்வம் இல்லை! ஸ்ரீலங்காவுக்கு அதிர்ஷ்டம் அதிகம், எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள். கென்யா, கனடா, ஜிம்பாப்வே என்று 3 மகா மொக்கை அணிகளையும், ஒரு நாள் போட்டிக்கு லாயக்கில்லாத ஒரு ஆடுகளத்தை அமைத்து, அதே ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளையும் (முறையே கால் இறுதியிலும், அரை இறுதியிலும்!) ஸ்ரீலங்கா வெற்றி பெற்றுள்ளதை என்னவென்று சொல்ல :( படு சுமாரான ஒரு அணி unfair-ஆக ஃபைனல்ஸுக்கு வந்திருப்பது உலகக்கோப்பையின் துர்பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்!!!!

கடைசியில் கிடைத்த செய்தியின்படி, மொஹாலியில் மழை பெய்திருக்கிறது. அதனால், இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கைத் துரத்துவது சரியான தேர்வாக இருக்குமோ என்று ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது :) After all, India chased a good total successfully on a difficult pitch at Motera against the formidable Aussies!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 26, 2011

இந்தியா vs ஆஸ்திரேலியா QF -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை

"செய் அல்லது செத்து மடி" என்ற வாசகத்துக்கு இணையாக அகமதாபாதின் Motera அரங்கம், போர்க்களமாக காட்சியளித்தது! ஆடுகளத்தின் ஒரு பக்கம் லேசான பசுமை தெரிந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, நின்று நிதானமாக ஆடவல்ல மட்டையாளர்களுக்கும் ஏற்ற, ஆடுகளம் என்று கூற பெரிய கிரிக்கெட் அறிவெல்லாம் தேவையில்லை.மற்றபடி, மைதானம் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி.

எதிர்பார்த்தது போல, டாஸில் வென்ற பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இரண்டாவதாக பேட் செய்யும்போது, ஆடுகளத்தில் பந்து மேலும் மெதுவாக மட்டையாளரை சென்றடையும் என்பதால், ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு மேல் எடுக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகப் பட்டது. அஷ்வின் முதல் ஓவரிலேயே பந்து வீச அழைக்கப்பட்டதால், Electrifying start எல்லாம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது!

Both Ashwin and Zaheer bowled well within themselves, not giving many boundary scoring opportunities. சாகீரின் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் அபாயப் பகுதியில் ஓடியதற்காக, official எச்சரிக்கை தரப்பட்ட நிலையில் சாகீர் round the wicket-க்கு மாறி பந்து வீச வேண்டிய கட்டாயத்தை லேசான பின்னடைவு என்று தான் கூற வேண்டும். 10 வது ஓவரில், end மாற்றி, தோனி அஷ்வினை பந்து வீச வைத்ததில் (good captaincy) உடனடி பலன்! ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட்! This is a very important breakthrough! ரிக்கி பாண்டிங் களமிறங்கினார். பேட்டிங்கில் கவனம், நிதானத்துடன் பயமும் அப்பட்டமாகத்தெரிந்தது :)

முனாஃப் படேல் பந்து வீச்சில் ஒரு வித routine தன்மை வந்து விட்டது. அடுத்துஎன்ன மாதிரி பந்து வீசுவார் என்பதை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் கணித்து விடுகிறார்கள்! 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார்! யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்). 30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது! இது போன்ற ஒன்றை சதுரங்க ஆட்டத்தில் Novelty என்பார்கள் :) It was a good move by Dhoni to keep the batsmen in the middle, guessing.

அபாரமாகத் திரும்பிய ஒரு leg spinner-ஐ தவிர்த்து, சச்சின் ஓவரில் டிராமா எதுவும் இல்லை! ஆனால் அடுத்த யுவராஜ் ஓவரில் (சச்சின் ஏன் திடீரென்று பந்து வீச வர வேண்டும் என்று மூளை குழம்பிய நிலையிலிருந்த) கிளார்க், off-stump-க்கு வெளியே வீசப்பட்ட பந்தை கஷ்டப்பட்டு long-on பக்கம் வளைத்து தூக்கியடிக்க, சாகீர் கப்பென்று கேட்ச் பிடித்தார் :) ஸ்கோர் 141/3 (31 ஓவர்களில்). இந்திய அணியின் பந்து வீச்சும், முக்கியமாக ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்தன. கோலி, ரெய்னா, யுவராஜ், அஷ்வின் ஃபீல்டிங்கில் பிரகாசித்தனர்!

For a change, India sensed blood :) இந்த சூழலில், ரிவர்ஸ் ஸ்விங்கை லேட்டாக கற்றுக் கொண்டாலும், லேட்டஸ்டாக விளங்கும் சாகீர் கானை தோனி பந்து வீச அழைத்தது, Smart Move! சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார்! ஸ்கோர் 152/4 (RR 4.47). நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டிங் தறிகெட்டு ஓடாததற்கு, 2 முக்கிய விக்கெட்டுகள்வீழ்ந்ததே காரணம் என்றால் அது மிகையில்லை.

ஒரு சில தினங்களில் நமது பந்து வீச்சு பிரமாதமானதாக மாறியது என்றில்லை, தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றமும் கச்சிதமாக இருந்தது. Dhoni surprised me again :) விராத் கோலி பந்து வீச வந்தார். தோனியின் ஃபேவரட் ரெய்னா பந்து வீச அழைக்கப்படாதது சற்று ஆச்சரியமாக இருந்தது. 40 ஓவர்களில் ஸ்கோர் 185/4. மீண்டும் சச்சின்! அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே! முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட்!) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட்! ஒயிட் மென்மையாக சாகீருக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் ;)

ரிக்கி பாண்டிங் மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பேட்டிங் பவர் பிளேயில் சாமியாடுவாரோ என்ற கவலை இருந்தது! ஆனால், it was David Hussey who played a neat little cameo (38 off 26) compensating for his brother's failure. 47வது ஓவரில் பாண்டிங் சதமடித்தார். அஷ்வின் மூளையை சரியாக பயன்படுத்தும்ஓர் எஞ்சினியர் என்பதை அவர் வீசிய 49வது ஓவர் நிரூபித்தது (4 ரன்கள் மட்டுமே)!

கடைசி ஓவரில் ஹர்பஜன் 13 ரன்கள் தாரை வார்த்ததில், ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 260/6. இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், துரத்த வல்ல இலக்கு என்று தான் தோன்றியது. பற்றற்ற முனிபுங்கவர்களுக்கு நிகரான சிலர் போல, 'இந்தியா வெல்வதை விட நல்ல fight back தர வேண்டும்' என்ற வறட்டு சித்தாந்தமெல்லாம் என் "பொது" புத்திக்கு அப்பாற்பட்டது :) அது போல, ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ வேண்டும் என்ற வெறியை விட, இந்தியா திறமையாக விளையாடி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது!

Second Innings: சச்சினும் சேவாகும் களமிறங்கினர். 100 கோடி+ மக்கள் இந்திய வெற்றிக்காக "அவரவர் தமதமது அறிவறி வகைவகை" விஷயங்களை செய்யத் தொடங்கினர்! முதல் ஓவரிலேயே ரென்ஷன், பாண்டிங் UDRS உதவி நாடியும், சேவாக் தப்பினார். சச்சினின் பேட்டிங்கில் இருந்த ஒரு வித purpose நம்பிக்கையைத் தந்தது. டைட்டின் பந்து வீச்சு சரியில்லாததால், ஜான்சன் அழைக்கப்பட்டார்.

9வது ஓவர் வரை அமைதி காத்த சேவாகால், அதற்கு மேல் "முடியல" :-) வாட்ஸனின் surprise பவுன்ஸருக்கு சேவாக் காலி, ஸ்கோர் 44-1. 11வது ஓவரில் சலசலப்பு, பாண்டிங் (கம்மனாட்டி) இவ்வளவு கிரிக்கெட் ஆடியும் திருந்தவே இல்லை என்பதை, கம்பீர் அடித்த பந்து தரையில் பட்டு அவர் கைகளில் விழுந்தும், அம்பயர்களிடம் அவர் செய்த அலம்பல் நிரூபித்தது!!!

ஜான்சனின் 12வது ஓவரில், சச்சின் அடித்த 2 பவுண்டரிகள் அற்புதமானவை.ஓன்று, முன்னேறி நடந்தபடி மிட்-விக்கெட் திசை நோக்கி செய்த Flick, மற்றொன்று, பாயிண்ட் திசையில் செய்த Steer! It was just pure timing from the little maestro! டைட் வீசிய 17வது ஓவரில், சச்சின் அரைச்சதம் பூர்த்தி, 61 பந்துகளில். டைட் கன்னாபின்னாவென்று பந்து வீசினாலும், ஹாடினின் விக்கெட் கீப்பிங் உலகத்தரமாக இருந்தது குறிப்பிட வேண்டியது. 19வது ஓவரில், டைட் வீசிய ஒரு unplayable பந்தில், ஹாடினுக்கு காட்ச் கொடுத்து சச்சின் விக்கெட் இழந்தார்! முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ?' என்ற பலர் நப்பாசையில் மண்! 98/2, 19 ஓவர்களில்.

சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்த சமயமிது. Length சரியில்லாததால், இந்த ஆடுகளத்திலும், கிரைஃசாவின் பந்துவீச்சு பரிமளிக்கவில்லை! வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj ! முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி வாயிலாக, he meant business என்று அறிவித்தார் :) இன்னொரு பக்கம், கம்பீர் நம்பிக்கைச் சின்னமாக 1,2 என்று ரன்களை சேர்த்து, ரன்ரேட் குறையாத வண்ணம் ஆடிக் கொண்டிருந்தார்.

33வது ஓவரில் கம்பீரின் அரைச்சதம். In the circumstances, this is a very special innings from Gautam. 34வது ஓவரில் ஒரு முறை தப்பிய கம்பீர், அடுத்த பந்தில் மீண்டும் "தலையிழந்த கோழி" போல ஓடி, அனாவசிய ரன் அவுட்! இதற்கு யுவராஜ் மேல் எந்த தவறும் கூற முடியாது. களமிறங்கிய தோனி ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காமல், லீ பந்தில், கிளார்க் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் வாயிலாக விக்கெட்டிழந்தார்.

38 ஓவர்களில் ஸ்கோர் 187/5. தேவையான ரன் ரேட் முதல் முறையாக ஆறைத் (6.2) தொட்டது! நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான்! ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது! ரென்ஷனால் விளைந்த reflex செயலாக, வாய் ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கியது :) எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார்

பனி காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு பந்தை grip செய்வது கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் புழுதி பறந்து கொண்டிருந்தது. Batting was becoming increasingly difficult. பவர் பிளே 45-46 ஓவர்களுக்குள் எடுத்து முடிந்திருக்க வேண்டும் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்தியா, BPP எடுக்காதது நல்லது என்று நான் கூறுவதற்கு 2 காரணங்கள்! 1. முந்தைய ஆட்டங்களின் அனுபவம் தந்த அச்சம் 2. தேவையான ரன்ரேட்டும் அத்தனை அதிகமில்லை. குஜராத்தின் "வெற்றி" நாயகர் நரேந்திர மோடி அரங்கில் இருந்ததால், மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது :)

40வது (லீ), 41வது (டைட்) ஓவர்களில் ஆட்டம் வேகமாக இந்தியா பக்கம் திரும்பியது :) மொத்தம் 27 ரன்கள்! ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!!! Raina soaked all the pressure of a high voltage World cup match, displayed splendid maturity in a difficult situation and that immensely helped Yuvaraj to stay Cool & play solidly! தோனி தன் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை துளியும் குறையாத வகையில் (முந்தைய IPL-ல் ஆடியது போலவே) ரெய்னா பந்து வீச்சை அபாரமாக கையாண்டார்.

45வது ஓவரில் யுவராஜின் அரைச்சதம்! இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை! 46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing! 47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை! Fittingly Yuvaraj scored the winning runs and a historic win knocked out the 3-time champion team!

பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த (அரை இறுதி) ஆட்டம், இதை விடக் கடினமாக இருக்கும் என்று மீடியாவில் கூக்குரல் கேட்டாலும், this match is easily the best game of the world cup so far, even better than the famous Irish win over England.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, March 22, 2011

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்!

இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரும், தோற்றால் ஸ்ரீலங்காவை சந்திக்க நேரும் என்பது தவிர ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெரிந்து கொள்ள என்னைப் போலவே, பல ரசிகர்களும் ஆர்வமாக இருந்திருப்பார்கள். அதாவது, நமது மிடில் ஆர்டர் பேட்டிங் இங்கிலாந்து, தெ.ஆ விடம் சொதப்பியது போல இந்த ஆட்டத்திலும் சொதப்புமா என்பது தான் அது :)

டாஸில் வென்ற தோனி, இங்கிலாந்து, தெ.ஆ விடம் செய்தது போல பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கனமான உருளையால் உருட்டப்பட்ட ஆடுகளம் என்பதால், bounce சற்று அதிகமாகவே இருக்கும் என்று பட்டது. இதை உணர்ந்த ராம்பால் short pitch வகை பந்துகளை வீச ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே சச்சின் விக்கெட் இழந்தார். அம்பயர் அவுட் தராதபோதும், சச்சின் just walked!

தோனி இம்முறை பதானை அனுப்பி சொதப்பல் செய்ய விரும்பாமல், ஒழுங்காக கோலியை அனுப்பினார்! சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் பந்துவீச்சு சுமார் தான். ராம்பால் பந்து வீச்சில் கம்பீர் அவுட்! ஸ்கோர் 53/2 (9 ஓவர்களில்), ராம்பால் பந்துவீச்சு (5-0-25-2) மிக சிறப்பாக இருந்தது. யுவராஜ் களமிறங்கினார். 12வது, 13வது ஓவர்களில் வெ.இ கேப்டன் டேரன் சாமி, வயசான மாமி போல ஃபீல்டிங் செய்ததில், யுவராஜ் 2 முறை தப்பினார்!

யுவராஜும், கோலியும் ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஸ்கோர் 173/2 (32 ஓவர்கள்). ரன்ரேட் 5.4. Even with 7 runs per over in the next 18 overs, a total of 300 was there for the asking! மீண்டும் ராம்பாலுக்கு விக்கெட், Kohli (59) bowled by a reverse swinging beauty! சுயநலக்கார தோனி தான் தடவித் தடவி ஆடி ஃபார்முக்கு வந்து விடும் நோக்கத்தில், களமிறங்கினார் (சொதப்பல் 1). அவரது தற்போதைய ஃபார்மை கணக்கில் கொண்டால், ரெய்னா தான் களமிறங்கியிருக்க வேண்டும். தோனி, ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு மட்டும் அணியில் சேர்த்தாரோ, என்ன எழவோ :) இந்த நிலையில் போலார்டும், பிஷுவும் நன்றாகவே பந்து வீசினர்.

42வது ஓவர் வரை கேவலமாக ஆடி கழுத்தறுத்த தோனி, பிஷு பந்து வீச்சில் அவுட். எடுத்தது 22 ரன்கள் (30 பந்துகள்) மட்டுமே! தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த கூத்து மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் பவர் பிளேயும் இன்னும் எடுக்கப்படவில்லை! தோனி களமிறங்கி 4-5 ஓவர்களில், அதாவது 37வது அல்லது 38வது ஓவர்களில் பவர் பிளே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (சொதப்பல் 2) இப்போது அதுவும் சாத்தியமில்லை. It was Dhoni who killed the momentum by coming 3 -down when he is in such pathetic form!

ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெய்னா அடிக்கப் போய் அவுட்டானர். இறுதி வரை நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த யுவராஜும் (113) அடுத்த (45வது) ஓவரில் காலி! (சொதப்பல் 3). 46வது ஓவரில் கட்டாய பவர் பிளே :) மீண்டும் ராம்பால்! பவர் பிளே என்றால், ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பதான் ஆடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. Pathan's middle stump was uprooted by a reverse swinging yorker (சொதப்பல் 4). ஸ்கோர் 252-7 (47 ஓவர்கள்). ஹர்பஜன், சாகீர், முனாஃப் மொத்தமாக 2.2 ஓவர்கள் தாக்கு பிடித்தனர். இந்தியா 49.1 ஓவர்களில் 268க்கு ஆட்டமிழந்தது (சொதப்பல் 5) Rampal bowled wonderfully throughout & deserved his 5 wickets, 10 0 51 5

இங்கிலாந்து, தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டங்களில் நடந்தது போலவே, இவ்வாட்டத்திலும், 218/3 என்ற நிலையிலிருந்து, 7.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது! நமது பந்து வீச்சு சுமார் ரகம் என்பது தெரிந்தது தான். ஆனால், பேட்டிங் இப்படி தொடர்ந்து சொதப்புவது தான் கவலைக்கிடமான விஷயம்!

WI Batting: இந்தியாவின் பந்து வீச்சை வெ.இ நம்பிக்கையுடன் எதிர் கொண்டது. எதிர்பார்த்தது போல அஷ்வின் அபாரமாக பந்து வீசினார். தோனி தொடர்ச்சியாக அவரை 8 ஓவர்கள் ஏன் பந்து வீச வைத்தார் என்று தோனியைத் தவிர வேறு யாருக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை! (சொதப்பல் 6) ஹர்பஜன் பந்து வீச்சு மிகச் சாதாரணமாகவே இருந்தது. ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு அனியில் சேர்த்தது போல, தோனி முனாஃபை சுழற்பந்து வீசச் சொல்வாரோ என்று பயமாக இருந்தது :) பதான், யுவராஜ், ரெய்னா (முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்!) என்று எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டு, போனால் போகிறது என்று முனாஃபுக்கு 25வது ஓவரில் வாய்ப்பு கொடுத்தார். This is captaincy at its worst denting the confidence of a new ball bowler! (சொதப்பல் 7)

ஸ்மித் ஆட்டம் அபாரமாக இருந்தது. 30 ஓவர்களில் ஸ்கோர் 154/2 (RR: 5.13, RRR: 5.75). ஸ்மித் 81 ரன்கள் (94 பந்துகள்). ராம்பாலுக்கு கை கூடிய reverse swing சாகீருக்கு வராதா என்ன! ஸ்மித் clean bowled! அடுத்த ஓவரில் ஹர்பஜனுக்கு ஒரு ஓசி விக்கெட். அதிரடி மன்னன் போலார்ட் அவுட்! ஹர்பஜனும், சாகீரும் வெ.இ பேட்டிங்கின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினர். அழுத்தம் கூடியதில், தேவையான ரன்ரேட் 6.8க்கு சென்றது (160/4) இந்த சூழலில், வெ.இ பேட்ஸ்மன் தற்கொலைப் படையாக மாறினர் :)

டேரன் சாமியை ரன் அவுட் செய்ய, முனாஃப் கையை நன்றாக உயர்த்தி, பின் செல்லமாக bails-ஐ தட்டி விட்டது, வடிவேலு காமடிக்கு நிகரான ஒன்று :) சாகீருக்கு 3 விக்கெட்டுகள், யுவராஜுக்கு 2 விக்கெட்டுகள். பிஷன் சிங் பேடி யுவராஜுக்கு சில tips கொடுத்தார் என்று செய்தி ஒன்று வாசித்திருக்கிறேன். யுவராஜ் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. யுவராஜ் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பரிமளிப்பது, இந்தியாவுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.

இதற்கு மேல் வெ.இ பேட்டிங் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. 34 ரன்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, வெ.இ அணியினர் சொதப்புவதில் தாங்கள் இந்தியாவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபித்தனர். 43 ஓவர்களில் 188 ரன்களுக்கு வெ.இ ஆட்டமிழந்தது! இந்த வெற்றியின் மூலம், இந்தியா கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஸ்ரீலங்காவை எதிர்த்து ஆடுவதை விட இது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது!

ஆரம்பத்தில், மீடியாவில் பயங்கரமாக ஏற்றி விடப்பட்ட இந்திய அணி, குரூப் ஆட்டங்களில் நல்ல அணிகளுடன் சொதப்பலாக விளைடியதில் ஒரு நன்மையும் இருக்கிறது. All the hype is gone now & no right thinking Indian cricket fan seriously feels that India has a great chance to win the World cup. இந்திய ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு இல்லாததால், கால் இறுதி அல்லது அரை இறுதி ஆட்டங்களில் (1996-இல் கொல்கத்தாவில் நடந்தது போல!) கலாட்டா/வன்முறை எதுவும் நிகழாது என்று நம்பலாம். இந்திய அணியை நான் கடுமையாக விமர்சித்தாலும், இந்தியா அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துகள்! "கடவுள்" தோற்கலாகாது என்பதால் என் பிரார்த்தனையும் தொடரும் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, March 20, 2011

உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து

நேற்று நடந்த முக்கியமான 2 ஆட்டங்களில், தெ.ஆ வும், unpredictable பாகிஸ்தானும் வெற்றி பெற்றதில், குரூப் A இடங்கள் நிச்சயிக்கப்பட்டதுடன், க்ரூப் Bயில் தெ.ஆ, இந்தியா, வெ.இ, இங்கிலாந்து என்று 4 அணிகள் தகுதி பெற்று விட்டன. நிஜப்புலி என்று நான் வர்ணித்திருந்த பங்களாதேஷ் புலித்தோல் போர்த்திய சுண்டெலி என்பது எனக்கு சற்று லேட்டாக தெரிய வந்தமைக்கு மாப்பு கேட்டுக் கொள்கிறேன் :)

இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வெ.இ சேப்பாக்க ஆட்டம் is only of academic interest. அதாவது, இரண்டாவது இடத்தில் இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என்பதை இந்த ஆட்டம் தீர்மானிக்கும், அதாவது, இந்தியா கால் இறுதிச் சுற்றில் எந்த அணியுடன் விளையாடும் என்பதை. இந்தியா தோற்றால், நமது லட்சணம் தெரிந்து போய் விடும்! ஆனாலும், ever hopeful இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டிக்கெட்டுக்காக போலீஸ் அடி வாங்கியதை மறந்து விட்டு, எப்போதும் போல பேராதரவு தருவது தொடரும்! இன்றைய ஆட்டத்தில், வெற்றி என்பது இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.

சரி, கால் இறுதிச் சுற்றில் யார் யாரை எதிர்த்து ஆடப் போகிறார்கள் என்று பார்க்கலாம்! இந்தியா இன்று வெற்றி பெற்றால், இந்தியா கால் இறுதியிலேயே, ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய (துர்பாக்கிய) நிலை ஏற்படும். சுழற்பந்து வீச்சுக்கு தோதான ஆடுகளம் அமைந்தால் மட்டுமே, நாம் அடுத்த சுற்றில் பிழைத்து முன்னேற முடியும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான எந்த விஷயமும் ஆடுகளத்தில் இல்லாதவாறு இருத்தல் அவசியம்! இவ்வாட்டம், மிர்பூரில் நடைபெறுவதாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், ஆடுகள மேட்டர் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை :)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - வெ.இ
ஸ்ரீலங்கா - இங்கிலாந்து (இந்த ஆட்டம் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூசிலாந்து - தெ.ஆ

இந்தியா வெ.இ யுடன் "சாதாரணமாக" தோற்றால், இந்தியா ஸ்ரீலங்காவை சந்திக்க நேரிடும்! இந்த ஆட்டத்துக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது :) ஒரு advantage உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஆட்டமிது என்பதால்! சர்தார் படேல் (மோடேரா, அகமதமாத்) தான் காப்பற்ற வேண்டும் :-)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - இங்கிலாந்து (இந்த ஆட்டமும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஸ்ரீலங்கா - இந்தியா
ஆஸ்திரேலியா - வெ.இ
நியூசிலாந்து - தெ.ஆ

இறுதியாக, இந்தியா மகா மோசமாக இன்று தோற்றால், B குரூப்பில் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தானை சந்திக்க வேண்டிய அதி துர்பாக்கிய நிலையும் வரலாம். அதுவும், நம்மூரில் இல்லை, மிர்பூரில்! இந்த ஆட்டத்தில், எந்த அணிக்கு பங்களாதேஷ் மக்கள் ஆதரவு இருக்கும் என்று மிக எளிதில் சொல்லி விடலாம் தானே :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 19, 2011

England vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்!

இதுவரை நடந்த ஆட்டங்களில், நான் மிகவும் ரசித்த ஆட்டமிது. சேப்பாக்கம் பொதுவாகவே டென்ஷன் ஏற்றும் ஆட்டங்களை கண்டு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே! இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றிருந்தால், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு ஊருக்குக் கிளம்ப வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கும். பின்புற வாசல் வழியாக, இந்தியாவும் பங்களாதேஷும் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

இங்கிலாந்து தோல்வியை நோக்கி வேகமாக தள்ளப்பட்ட நிலையிலும், சோர்வடையாமல் நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்றது. எனக்குப் பிடித்த அணி வென்றதில் மிக்க மகிழ்ச்சி! அடுத்து வரும் 2 ஆட்டங்களில் (இந்தியா-வெ.இ, தெ.ஆ-பங்களாதேஷ்), இந்தியா, தெ.ஆ என்று இருவரும் மண்ணைக் கவ்வினாலொழிய, இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்!

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48/1, 9 ஓவர்களில். அடுத்து வந்த ஜோனாதன் டிராட், பவுண்டரிகளாக ரன்களை குவித்தார். அதிரடி ஆட்டமெல்லாம் இல்லை, அருமையான placement & timing! சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ, இது அவரது முதல் ஆட்டம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக பந்து வீசினார். டிராட் விக்கெட்டையும் கைப்பற்றினார். ஸ்கோர் 121/3 (22 ஓவர்கள்). பிஷூ 4-0-13-1.


போலார்டும் பிஷூவும், இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெல், மார்கன், போபாரா என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததில், 134/3 என்பதிலிருந்து 152/6 (33 ஓவர்களில்). இதுவே, இந்தியாவாக இருந்திருந்தால், 200 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்! இங்கிலாந்து 243 ரன்கள் எடுத்து 48.4 ஓவர்களில் ஆட்டமிழந்தது. பிஷு 10-0-34-3


பேட்டிங்குக்கு களமிறங்கியது வெ.இ. துவக்க ஆட்டக்காரர் கெய்லுக்கு, 3வது ஓவரில் வெறி பிடித்தது :) அவர் விளாசிய விளாசலில், ஸ்கோர் 53/0 (6 ஓவர்கள்). இந்தச் சூழலிலும், ஸ்வான் பந்து வீச்சு சிறப்பு, 3-0-10-0. டிரெட்வெல் பந்து வீச்சில் கெய்ல் வீழ்ந்தார். இங்கிலாந்துக்கு மூச்சு வந்தது :) ஆனாலும், டேரன் சாமி, கெய்ல் இல்லாத குறையை போக்கும் விதமாக பேட்டிங் செய்ததில், 15 ஓவர்களில் ஸ்கோர் 106/3, RR: 7.06, RRR: 3.94, இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி போலத் தெரிந்தது! விழுந்த 3 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர் டிரெட்வெல்லுக்குத் தான், 5-1-32-3


இங்கிலாந்தின் பந்து வீச்சு மீண்டும் பரிமளிக்க ஆரம்பித்ததில், அடுத்த 15 ஓவர்களில் வெ.இ எடுத்த ரன்கள் 48 மட்டுமே, அதிரடி மன்னன் போலார்ட் ஆடியும்! 3 விக்கெட்டுகள் காலி, ஸ்கோர் 154/6. ஆஹா, இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது போலத் தெரிகிறதே என்று நினைத்தால், ரஸ்ஸல் (சர்வானுடன் ஜோடி சேர்ந்து) இங்கிலாந்து பந்து வீச்சை அனாயசமாக கையாண்டதில் ஸ்கோர் 40 ஓவர்களில் ஸ்கோர் 217/6. தேவையான ரன்ரேட் 2.7 மட்டுமே! ரஸ்ஸல் 49* (40 பந்துகளில்). இளங்காளை பயமறியாது என்பதற்கு ரஸ்ஸல் சரியான எ.கா.



எனக்கு ச.கா (சம்ம காண்டு) :) வெ.இ க்கு ரெவ்யூ பாக்கி இல்லாத நிலையில், தனது கடைசி ஓவரில், டிரெட்வெல், ரஸ்ஸலை வீட்டுக்கு அனுப்பினார். 44வது ஓவரில், ஸ்வான், சர்வான், ரோச் என்று 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதில், இங்கிலாந்து வெற்றிக்கு அருகில் வந்து, அடுத்த ஓவரில் வெற்றியைத் தொட்டது. வெ.இ 225 ரன்களில் ஆட்டமிழந்தது! இங்கிலாந்து போன்ற ஒரு நல்ல அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறும் நிலையில் இன்னும் நீடிப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் (ஸ்வான், டிரெட்வெல்) இருவரும் மொத்தம் 20 ஓவர்கள் வீசி, 84 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடவேண்டியது!


இறுதியாக, Dont worry, Be Happy சமாச்சாரத்திற்கு வருவோம்! சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில், இந்தியா மகா மோசமாக தோற்றாலொழிய, இந்தியா கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி தான்! இருந்தாலும், நமது கிரிக்கெட்பாரம்பரிய வழக்கப்படி, தென்னாபிரிக்கா பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தல் நலம் பயக்கும் ;-) ஏனெனில், இந்தியா வெஸ்ட் இண்டீஸை வெல்ல வேண்டுமே என்ற ரென்ஷனான எதிர்பார்ப்பை விட தெ.ஆ தனது ஆட்டத்தில் வெல்லும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்காத ஒன்று!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, March 13, 2011

India vs South Africa - Paper Tiger stands exposed

இப்பகலிரவு ஆட்டத்தில், இந்தியா டாஸில் வென்றதே பாதி வெற்றிக்கு இணையானது என்று கூறலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சேவாக் அபாயகரமாக வாழ்ந்தாலும், அவர் ஆட்டத்தின் இயல்பே அத்தகையது என்பதால், குறை கூற எதுவுமில்லை! சச்சின் சச்சின் போல விளையாடினார் :) ரன்கள் குவிந்தன! ஸ்டெயின், மார்கலின் பந்து வீச்சும் பரிமளிக்காததால், இருவரும் பந்து வீச்சை அடித்துத் துவைத்து காயப் போட்டனர்.

எப்போதும் போல, ஒரு மோசமான பந்துக்கு சேவாக் விக்கெட்டிழந்தார்! ஸ்கோர் 142/1, 17.4 ஓவர்களில், ரன்ரேட் 8.04. அடுத்து வந்த கம்பீர் முதலில் நிதானமாக ஆடினாலும், போகப் போக பிக்-அப் பண்ணிக் கொண்டு சச்சின் மேல் அனாவசிய அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். Sachin was playing in a league of his own that brooks no opposition!!

30 ஓவர்களில் ஸ்கோர் 197/1 (RR: 6.56). சச்சின் 83 (73 பந்துகள்). இதில் 3 சிக்ஸர்கள். சின்ன வயது சச்சின் போல மீண்டும் சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்துள்ளார் :) ஸ்டெயினின் பந்தை ஹூக் செய்து அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாத நிலையில், இத்தகைய பலமான அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், இந்த ஸ்கோர் இரு மடங்காகும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது! இது சற்று அதிகம் என்று கொண்டாலும் கூட, மீதமுள்ள 20 ஓவர்களில் பிரதி ஓவருக்கு 7 ரன்கள் என்ற கணக்கில், 140 ரன்கள் எடுப்பதில் எந்த சிரமமும் இருந்திருக்க முடியாது! ஆக 340 ரன்கள் என்ற இலக்கை bare minimum என்று கூற வேண்டும்!!!

36வது ஓவரில் சச்சினின் மற்றொரு சதம் (99th International Ton). 38வது ஓவர் முடிவில் ஸ்கோர் 253/1. 39-ல் பவர்பிளே தேர்ந்தெடுத்தது சரியானது என்றாலும், 40வது ஓவரில் சச்சின் அவுட்டானதும், பதானை களமிறக்கியது தவறு, பதான் ஆட்டத்துக்கு பவர்பிளே தேவையில்லை என்பது என் எண்ணம்! அடுத்த ஓவரில் கம்பீரும் விக்கெட்டிழந்தார். இப்போதாவது கோலியை அனுப்பியிருக்க வேண்டும். 2வது அல்லது 3வது டவுனில் கோலி ஆடுவதே பயனளிக்கக் கூடியது. அதே ஓவரில் பதானும் அவுட்!

இப்போதும் கோலியை அனுப்பாமல், தோனி களமிறங்கினார். தோனியின் தற்போதைய திராபை ஃபார்முக்கு அவர் 5-down வருவதே சாலச் சிறந்தது! கடைசி 4-5 ஓவர்களில் "பட்டால் பாக்கியம் படாவிட்டால் லேகியம்" என்று அதிரடியாக மட்டை சுழற்றுவதற்கு அவரது புஜபராக்கிரமம் உதவலாம்! With his pathetic form, Dhoni promoting himself either to accelerate scoring OR to steady the ship is absolutely of NO USE at all. ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி அற்புதமாக ஆடுவதை (விளம்பரங்களில் மட்டும்!) பார்த்திருப்பீர்கள் :-)

கம்பீர் விக்கெட்டுக்குப் பின் இந்தியர்கள் செய்தது harakiri மட்டுமல்ல, மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடிய middle order-ன் பேட்டிங் (அனுபவம் இல்லாத) கென்யா, கனடா பேட்டிங்குக்கு நிகராக இருந்தது! பவர் பிளே ஓவர்களில் 4 விக்கெடுகள் இழந்து 30 ரன்கள் எடுத்தது atrocious to say the least! Worse was to follow! அடுத்த 5.4 ஓவர்களில், மீதி 5 விக்கெட்டுகளும் காலி, 13 ரன்கள், மொத்தத்தில் 300 கூட தேறவில்லை! 296 ஆல் அவுட்!!!! 320 is a par score on this pitch என்று வர்ணனையில் யாரோ கூவிக் கொண்டிருந்தார்கள்!

I am pretty used to seeing the Indian middle order debacles but this one left me speechless :) Favorites என்று எல்லா தளங்களிலும் சதாசர்வகாலமும் அறிவிக்கப்படும் நம்பர் 1 அணி இது போல மகா கேவலமாக, பிசாசு உலவாத ஆடுகளத்தில் மண்ணைக் கவ்வியதை என்னவென்று சொல்ல! It was really unpardonable to have wasted such a dream start provided by the top 3 batsmen. இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! அவர் சென்ற பின்னர், கம்பீராவது ஒரு பக்கம் நின்று ஆட முயற்சித்திருக்க வேண்டும்.

அதே சமயம், இறுதி 10 ஓவர்களில் (முதல் 40 ஓவர்களில் அடிபட்டு சுருண்டிருந்த) தென்னாப்பிரிக்க ஹயீனா, சச்சின், கம்பீர் விக்கெட்டுகளுக்கு பின் லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது :) ஸ்டெயினின் பந்து வீச்சில் வீரியம் கூடியது. இவருக்கு 5 விக்கெட்டுகள்! This showed the exemplary character of the great fast bowler who was taken to task in his earlier spells. His last 4 overs read 4-0-9-5.

தென்னாபிரிக்கா ஆடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை சாதகமாக இல்லை. சாகீர் சிறப்பாக பந்து வீசினார். 5-0-13-1. This time around, SA played sensibly and bided its time. அம்லா, காலிஸ், டிவிலியர்ஸ் அரைச் சதங்கள் எடுத்தனர். காலிஸின் ஸ்வீப், டிவிலியர்ஸின் inside-out விளாசல்களும் அருமை. தோனியின் பந்து வீச்சு மாற்றங்கள் சரியாக அமைந்ததாலும், ஹர்பஜன் அருமையாக பந்து வீசி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதாலும், ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது என்று கூறலாம். 45 ஓவர்கள் முடிவில், தெ.ஆ 251/6 (46 runs required from 30 balls, RR: 5.57, RRR: 9.20). ரென்ஷன் :)

3 ஓவர்கள், 31 ரன்கள். முனாஃப் ஓவரில் 14 ரன்கள்! 2 ஓவர்கள், 17 ரன்கள். மேலும், ரென்ஷன்! சாகீரை கடைசி ஓவருக்கு வைத்திருக்கலாம், முனாஃப் 14 ரன்கள் வாரி வழங்காமல் இருந்திருந்தால்! (49வது) சாகீரின் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே! Outstanding bowling with the old ball !! 1 ஓவர், 13 ரன்கள் தேவை. மேலும் மேலும் ரென்ஷன் :)

இந்த ஓவரை வீச நெஹ்ராவை தோனி அழைத்தது தவறு என்று டிவிட்டரில் பல எதிர்ப்புக் குரல்கள் :) With Harbajan bowling well with a good rythm, he should have been the automatic choice. நெஹ்ராவின் முதல் 2 பந்துகளில், பீட்டர்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று விளாசினார்! Match was effectively lost for India! நெஹ்ரா அல்லது முனாஃபுக்கு பதிலாக அஷ்வின் ஆடியிருந்தால், இந்த ஆடுகளத்தில் தெ.ஆ 297 என்ற இலக்கை கனவில் கூட எட்டியிருக்காது என்று உறுதியாகக் கூறுவேன்! பிரவீன் இல்லாததும் ஒரு பெரிய குறை, சாகீருக்கு நல்லதொரு பார்ட்னராக இருந்திருப்பார்.

Choking என்பதை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை கொண்ட தென்னாபிரிக்காவை, 13 ரன்கள் தேவை, 7 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையில், பீட்டர்சன் என்ற திராபை இறுதி ஓவரை எதிர்கொண்ட சூழலில், இந்தியா எளிதில் வீழ்த்தியிருக்க வேண்டும்! அதை தவறவிட்டது தான், என்னளவில், மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேவலம்! As of now, India's world cup dream looks like "Nightmare on Elm street" :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, February 20, 2011

மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்

மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்


டிவி மீடியாவில் சதா சர்வகாலமும் எதிரொலிப்பதை போல இந்தியா (2003 மற்றும் 2007 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியைப் போல!) சூப்பர் டூப்பர் அணியெல்லாம் இல்லை. தற்போதுள்ள இந்திய அணி, 2007 அணியை விட நம்பிக்கையிலும், திறமையிலும் சற்றே மேல் என்று சொல்லலாம். பங்களாதேஷ¤டன் ஆடிய 2007 அணியில் இருந்த 11 பேரில், 7 ஆட்டக்காரர்கள் இன்றைய அணியிலும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

நமது பந்து வீச்சு அத்தனை பிரமாதமில்லை. பேட்டிங்க் முக்கிய ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய கோப்பையை வெல்வது அத்தனை சுலபமில்லை. கேப்டன் தோனியின் அதிர்ஷ்டம் (IPL-இல் கைகொடுத்தது போல) கடினமான தருணங்களில் கை கொடுக்கும் என்று நம்புவோம் :) உலகக்கோப்பை கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற, கிரிக்கெட் பிரபலங்களையும், இன்னபிற செலிபிரிடி (கிரிக்கெட்) ஞானசூன்யங்களையும் இந்தியா தான் Hot favaourites என்று மீடியாக்களில் 24 X 7 சொல்ல வைப்பது ஒரு விளம்பர யுக்தி. பின், பங்களாதேஷையும், நியூசிலாந்தையும், வெஸ்ட்-இண்டீஸையும் முன்னிறுத்தினால், விளம்பரம் கிடைக்குமா அல்லது துட்டு தான் தேறுமா?

இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் நடைபெற்ற மிர்பூர் பற்றி சில தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன! மிர்பூரின் கற்றவர் எண்ணிக்கை (Literacy rate) 69% (பங்களாதேஷின் தேசிய லிடரசி அளவான 49% உடன் ஒப்பிட்டால் இது மிக அதிகம்). நோபல் பரிசு பெற்ற கிரமீன் வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு தான் உள்ளது.

மேலே எழுதியிருப்பது, இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னமே எழுதியது!

சரி, ஆட்டத்துக்கு போலாமா? முதலில் 2007-ல் நடந்த debacle-ஐ மனதில் கொண்டு இந்த ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். சனிக்கிழமைகளில் மாலையில் குளிக்கும் பழக்கமுடைய நான், நேற்று சீக்கிரமே குளித்து விட்டு, பயபக்தியுடன் "விஷ்ணு" பழமாக டிவி முன் ஆஜரானேன்! பங்களாதேஷ் செய்த முதலும் கடைசியுமான தவறு டாஸில் ஜெயித்து இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது தான்! இலக்கு என்று ஒன்று இல்லையென்றால், நமது மட்டையாளர்கள் சற்று சுதந்திரமாக தைரியமாக விளையாடுவார்கள்!

அது போலவே, சச்சினும் சேவாகும் முதல் 4 ஓவர்களில் விளாசிய விளாசலில், ஸ்கோர் 36-0. சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தவுடன் விளாசல் சற்றே குறைந்தது என்று கூறலாம். 11வது ஓவரில் இல்லாத ரன்னுக்கு ஓடி சச்சின் ஆட்டமிழந்தார். 69-1. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவானதாக இல்லாதபோதும், சேவாகும், கம்பீரும், சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். 24வது ஓவரில் கம்பீர் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 153-2. சேவாக் அதிரடியை சற்று குறைத்துக் கொண்டு ஆடியது இந்த ஆடுகளத்தில் சரியான அப்ரோச் என்று நினைக்கிறேன்.

இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று தோன்றியது. தன்னம்பிக்கை மிக்க விராத் கோலி முதலில் சற்று நிதானமாகவே ஆடினார். , Batting power play -இல் (35 to 39, 5 ஓவர்கள்) சேவாகும், கோலியும் 48 ரன்களே எடுத்தபோதிலும், கடைசி 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்ததில், ஸ்கோர் 370-ஐ எட்டியது. சேவாக் 175, கோலி 100 ரன்கள்.

பங்களாதேஷ் பந்துவீச்சில், ரூபெல் ஹொசைன், கேப்டன் ஷகீப் இருவர் மட்டுமே, சேவாக்-கோலி செய்த துவம்சத்தின் இடையிலும் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொண்டனர். இந்தியா 300-ஐ தாண்டியபின், டிவி கேமரா அரங்கில் இருந்த பார்வையாளர்களிடம் ஒரு ரவுண்ட் வந்தபோது, பல இருக்கைகள் காலியாக இருந்தது போல் தெரிந்தது எனது பிரமையா என்று தெரியவில்லை! யாராவது இதை கவனித்தீர்களா?

பங்களாதேஷ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அகில உலகமே தெளிவாக இருந்தபோது, ஸ்ரீசாந்த் (ஐகாரஸ் பிரகாஷ் இவரை காமெடி பீஸ் என்கிறார்!) தனது 3வது ஓவரில் 24 ரன்கள் தாரை வார்த்து, மக்களுக்கு ஆட்டத்தில் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டார். பங்களாதேஷ் ஸ்கோர் 5 ஓவர்களில் 51-0. இருந்தும், இலக்கு 370 என்பதால், இந்தியாவில் யாருக்கும் ரத்த அழுத்தம் கூடவில்லை!

எனக்குப் பிடித்த தமீம் இக்பால் இன்னும் சற்று அதிரடியாக ஆடியிருக்கலாம் என்று தோன்றியது. சாகீரும், முனா·பும், அதற்குப் பின் வந்த ஹர்பஜனும், யுவராஜும் ஒழுங்காக பந்து வீசியதில். பங்களாதேஷின் ரன்ரேட் எந்த ஒரு நிலையிலும், 6-ஐ தாண்டவில்லை. தேவையான ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. 30 ஓவர்களின் முடிவில், தேவையான ரன்ரேட் 10.1.

பங்களாதேஷ் 2 விக்கெட்டுகளே இழந்திருந்தாலும், தமீம், ஷகீப் தவிர்த்து அதிரடியாக ஆடக்கூடியவர்கள் யாரும் இல்லாததால், ஸ்ரீசாந்த் தனது முழு கோட்டாவான 10 ஓவர்கள் பந்து வீசினாலொழிய இந்தியா தோற்பதற்கு வாய்ப்பே இல்லை ;-) பங்களாதேஷின் பேட்டிங்கைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. தமீம் இக்பாலும், ஷகீபும் அரைச்சதங்கள் எடுத்ததால், ஸ்கோருக்கு ஒரு மரியாதை கிட்டியது, 283-9. முனா·ப் 4 விக்கெட்டுகள்.

இந்த வெற்றியை வைத்து எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொள்வது யாருக்கும் நல்லதல்ல! முதல் சுற்றில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பதை வைத்துத்தான், இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறித்து எதுவும் கூற இயலும்! Just to reiterate, நான் மேலே கூறியதை ("பேட்டிங்க் முக்கிய ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய இந்தியா கோப்பையை வெல்வது அத்தனை சுலபமில்லை" என்பதை) இந்த ஆட்டம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

How the middle order plays the middle overs when the top-order calls in sick is where matches will be won and lost for skipper Dhoni - Faisal Shariff (in Rediff.com)

என்றென்றும் அன்புடன்,
பாலா

Monday, December 27, 2010

493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12

திருப்பாவை பன்னிரண்டாம் பாடல்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?

கேதார கெளள ராகம் , ஆதிதாளம்

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

பொருளுரை:

பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!

பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?

பாசுரச் சிறப்பு:


கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்! 'கன்றுக்கு பசிக்குமே' என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், அவ்விலத்து எருமைகள் கறக்காமலேயே பாலைச் சுரக்கத் தொடங்கினவாம். தன் குழந்தைக்குப் பசி என்பதை ஒரு தாய் அது அழுவதற்கு முன்னமே புரிந்து கொள்கிறாள் இல்லையா! "சாப்பிட்டு விட்டு எந்த வேலை இருந்தாலும் பாரேன்" என்ற அன்னையின் குரல் கேட்காத வீடும் இருக்கிறதா என்ன!

'நனைத்தில்லம் சேறாக்கும்' - அந்த வீட்டில் அத்தனை கறவைகள் இருந்தன. கன்றை எண்ணி (உண்டு செழித்திருந்த) எருமைகள் பாலைச் சுரந்தாலும் கன்றுகள் தான் எவ்வளவு குடிக்க முடியும்! அவை குடித்த பின்னும் சுரந்து கொண்டேயிருந்த பாலானது, தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து வீடே சேறாகி விட்டதாம். அவ்வீட்டின் செல்வச் செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.

முந்தைய (கற்றுக் கறவை கணங்கள் பல) பாசுரத்தில், உறங்கும் பெண்ணின் தந்தையை முன்னிருத்தி (கோவலர் தம் பொற்கொடியே), ஆண்டாள் அவளை துயிலெழுப்பினாள். இப்பாசுரத்தில் உறங்கும் கோபியர் குலப் பெண்ணை, அவளது அண்ணனை முன்னிருத்தி (நற்செல்வன் தங்காய்!) ஆண்டாள் எழுப்புகிறாள். இந்த அண்ணனானவன், கண்ணனுக்கு மிக நெருக்கமானவன். அதனாலேயே அவனுக்கு நற்செல்வன் என்ற சிறப்பு தரப்பட்டது!

ஆனால், அவன் தன் தினக் கடமையான பால் கறத்தலை செய்யாததால் தானே, சுரந்த பாலால் வீடே சேறானது. பின் அவன் எப்படி "நற்செல்வன்" ஆனான்? கோதை நாச்சியார் சொல்ல வருவதை புரிந்து கொண்டால், அதற்கும் சரியான பதில் கிடைத்து விடுகிறது!


நற்செல்வன் என்பதற்கு ஞானத்தையும், பிரம்மானுபவத்தையும், பகவத் கைங்கர்யத்தையும் செல்வங்களாகக் கிடைக்கப் பெற்றவன் என்று பொருளாம். அவன் அன்று கண்ணனுக்கு சேவை (பகவத் கைங்கர்யம்) செய்ய புறப்பட்டுச் சென்று விட்டதால், அவனது நித்ய கடமையை(பால் கறப்பது) செய்ய இயலாமல் போனது. அதனாலேயே, எருமைகளின் முலைக்காம்புகளிலிருந்து பால் சுரந்து இல்லமெங்கும் ஈரமாகிப் போனது !! அப்பேர்ப்பட்ட அண்ணனின் தங்கையான (நற்செல்வன் தங்காய்) இவளும் ஓர் உத்தம அதிகாரியே.

இலக்குமணன், தன் தாய் சுமித்திரையின் கட்டளையை ஏற்று, ராமபிரான், சீதையுடன் வனம் சென்று, அவர்களுக்குத் தொண்டாற்றிய படியால், தன் குடும்ப வாழ்வின் கடமையை செய்யத் தவறியது போல தோன்றினாலும், அவன் குற்றம் புரிந்தவன் ஆக மாட்டான். அதாவது, பகவத்-பாகவத சேவை, நித்ய சேவையைக் காட்டிலும் முக்கியமானது என்பது இதிலிருந்து கிடைக்கும் செய்தியாம். சில நேரங்களில், சாதாரண சேவைகளை விடவும் அசாதாரண சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன தானே!

சில பூர்வாச்சார்யர்கள், கன்றுக்காக இரங்கி பாலைச் சுரக்கும் எருமையை, அன்பே வடிவான திருமகள் உருவகமாகவும், செல்வத்தின் அதிபதியான திருமகளை பரமன் தன்னிடத்தில் கொண்டதால், நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்! ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை (ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

"நற்செல்வன் தங்காய்" என்று வருகிறதே என்ற ஐயம் எழலாம்! மேற்சொன்ன வகையில் இப்பாசுரத்தை நோக்கும்போது, திருமகள் "ஹிரண்மயி" என்பதால் தங்கை என்ற பதத்தை "தங்கம்" என்று கொள்ள வேண்டும்.

அக்கோபியின் அண்ணன், ஸ்ரீகிருஷ்ணனின் அந்தரங்க தாசன், அதாவது, ஸ்ரீராமனுக்கு இளையபெருமாள் போல. அதனாலும், சக்ரவர்த்தித் திருமகன் பெண்களை ஒருபோதும் வருத்தாமையாலும், இப்பாசுரத்தில் ஸ்ரீராமபிரானின் சிறப்பு சொல்லப்பட்டது. ராம(ரிடம்) சரணாகதியைக் கொண்டாடும் பாசுரமாகவும் இதைப் பார்க்க முடிகிறது!

மேலும், "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை" என்று 5 வார்த்தகளில் ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி! ஸ்ரீராமன் என்ற உத்தம மகாபுருஷனுக்கு கோபம் உண்டு, ஆனால் வெறுப்பு கிடையாது.

தன் மனத்துக்கினிய சீதையை கவர்ந்து சென்றதால் தானே, (கோபமே வராத) ஸ்ரீராமனுக்கு சினம் உண்டாகி, இராவணனை வதம் செய்ய நேர்ந்தது. சரி, ராமன் எப்படி "மனத்துக்கினியான்" ஆகிறான்? அவன் ஏகபத்தினி விரதன் ஆன காரணத்தாலே! எல்லா நற்குணங்களைக் காட்டிலும், ஒரு கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பதே, அவன் மனைவிக்கு உவகை தரும்.

ஓர் ஆண்மகனுக்கு பெருமை சேர்க்கும் குணநலனாக அது கருதப்படுகிறது! அதனால், ராமபிரானை மனத்துக்கினியானாக நாச்சியார் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ராமனை "புண்ணியன்" என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்) போற்றியதை நினைவு கூர வேண்டும்.

"அனைத்தில்லத்தாரும் அறிந்து" எனும்போது, ஆய்ப்பாடியிலுள்ள அத்தனைப் பெண்டிரும் உறங்கும் இந்த ஒருத்தியை எழுப்புவதற்காக அவள் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பது குறிப்பில் உணர்த்தப்பட்டது!


மேலும், சென்ற பாசுரத்தில் ஆயர்கள் பால் கறந்ததாகச் (கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து) சொன்னபோது, கர்மயோகத்தின் அவசியம் குறிப்பில் உணர்த்தப்பட்டதாகவும், இப்பாசுரத்தில் (நற்செல்வன் திருச்சேவையில் இருந்தபடியால்!) பால் கறக்காமை விவரிக்கப்படுவதை கர்மயோகத்தைக் காட்டிலும் பகவத் / பாகவத சேவையின் உயர்வைச் சொல்வதாகவும், எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அன்னங்கராச்சார் சுவாமிகள் கூறுவார்.

அடுத்து, கோதை நாச்சியார் விவரிக்கும் ரம்யமான காட்சியைப் பாருங்கள். மேலே, பனிமழை பொழிந்து வெள்ளமிட்டு தலை நனைக்க, கீழே பால் பெருகி வெள்ளமிட்டு கால் நனைக்க, இவை நடுவில் திருமாலினிடத்து (கண்ணபிரான்) பெருங்காதல் வெள்ளமிட்டு மனதை நனைக்க, அந்த உத்தம பாகவதையின் வீட்டு வாசலே கதியென்று வந்து, எம்பெருமானை போற்றிப் பாடி, தங்கள் உய்வுக்கு வேண்டி அவளை துயிலெழுப்புகிறது ஒரு கோபியர் கூட்டம்!!!

பாசுர உள்ளுரை:

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
- இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பனித்தலை வீழ - அஞ்ஞானமிக்க (நாங்கள்)

நின் வாசற்கடை பற்றி - "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு

தென்னிலங்கைக் கோமானைச் செற்ற - கட்டுப்பாடற்ற புலன்சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல

மனத்துக்கினியானை - கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் "கண்ணுக்கினியவன்" ஆவான் :) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

ஈதென்ன பேருறக்கம் - நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?

அனைத்தில்லத்தாரும் அறிந்து - பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு, அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!
**************************************

இது பொய்கை ஆழ்வாரை துயிலெழுப்பும் பாசுரம் என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்:

"நற்செல்வன் தங்காய்" என்ற பதம் பொய்கையாருக்குப் பொருந்தும். குளத்தில் இருந்த தாமரை மலரில் (திருமகளைப் போலவே!) இவர் தோன்றியவர். அதனால், திருமகளின் தங்கை என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார்.

"பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று இவ்வாழ்வாரே தன் நிலை குறித்து பாடியிருக்கிறார் ஒரு பாசுரத்தில் ! அப்படி அவரது கண்ணீரும், அவர் பிறந்த இடத்தின் (பொய்கை) தன்மையும் சேர்ந்து, பொய்கையாரின் இல்லம் "நனைத்து இல்லம் சேறாக்கும்" என்ற உவமானத்துக்கு பொருத்தமாக வருகிறது தானே :)

ஒருவர் பேச/பாடத் தொடங்குமுன் தொண்டையை செருமுவது (கனைத்து!) வழக்கம் தானே! அதனால், "கனைத்து" என்பது முதல் 3 ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாருக்கு மிகப் பொருத்தமே, அதாவது இவருக்கு முன் எந்த ஆழ்வாரும் பாசுரங்கள் பாடவில்லையே!

இளம் கற்றெருமை கன்று - ஏற்கனவே சொன்னபடி, பொய்கையார் என்ற (ஆழ்வார்களில்) முதல் ஆச்சார்யனை கற்றெருமை உருவகப்படுத்துகிறது. கன்று என்ற பதம் அவருக்குப் பின்னாலும் ஆழ்வார்கள் உள்ளனர் என்பதை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

கன்றுக்கிரங்கி - அடியவர்களான நம் மேல் கருணை கொண்டு, பொய்கையார் தனது திருவந்தாதியை நமக்கு அருளினார்!

இனிதான் எழுந்திராய் - " "பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று விம்மிய நீரே இப்படி உறங்கலாமா?" என்று கோதை நாச்சியார் பொய்கையாரை கேள்வி கேட்கிறார். எதற்கு ? துயில் நீங்கி வந்து, ஆண்டாளுக்கும், கோபியர்களுக்கும் (அடியவர்களுக்கு) ஞானோபதேசம் செய்து உய்வுக்கு வழி காட்டுவதற்காக!

அனைத்தில்லத்தாரும் அறிந்து - ஆண்டாள் பாடியது பொய்கையாரின் "அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்" என்ற பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!

இப்பாசுரத்தின் முடிவில், கோதை நாச்சியார், தன்னிலும் மூத்தவரான அனைத்து ஆழ்வார்களையும் துயிலெழுப்பி விடுவதாக, இது குறிப்பில் உணர்த்துவதாம். அதாவது, ஆழ்வார் திருக்கோஷ்டியில் உள்ள மதுரகவியாரையும், ஆண்டாளையுமே சேர்த்துத் தான்!

இதில் மதுரகவியார் எப்படி வருகிறார்? "நற்செல்வன் தங்காய்" என்பதை "நற்செல்வன் தன் கையே" என்று கொள்ளும்போது, நற்செல்வன் என்பது திருவாய்மொழி அருளிய குருகூர் பிரான் ஆன நம்மாழ்வரை குறிப்பதாக உள்ளர்த்தம். அப்படிப் பார்க்கும்போது, அவருக்கு "கையாக" இருந்து நம்மாழ்வாரின் திருப்பாசுரங்களை பதிவு செய்த மதுரகவி ஆழ்வாரை, "நற்செல்வன் தங்காய்" குறிப்பில் உணர்த்துவதாக சொல்லலாம் தானே !

மேலும், எம்பெருமானாரை (எந்தை ராமானுச முனி) நற்செல்வனாகக் கொண்டால், "நற்செல்வன் தங்காய்" என்பது ஆண்டாளையே குறிப்பில் உணர்த்துவதாகிறது!

"கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய்" என்பதையும், "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" என்பதையும் நினை கூர வேண்டும்!

இறுதியாக, இந்த ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்பதை கோதையாரின் திவ்யப் பாசுரங்களை சுவைப்பதற்கான ஆனந்த அனுபவமாக பார்க்க வேண்டும். அப்போது ஆண்டாள் தன்னையே துயிலெழுப்பிக் கொள்ள முடியுமா போன்ற கேள்விகள் எழாது..

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 26, 2010

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11

திருப்பாவை பதினொன்றாம் பாடல்

பெண்ணே, அசையாமல் பதில் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?

உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


பொருளுரை:

கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!

புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!


பாசுரம் தரும் செய்திகள்:

"கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து" - இச்சொல்லாடலுக்கு 'அக்கோவலர் இல்லத்தில் ஏராளமான (எண்ணிக்கை தெரியாத அளவுக்கு!) பசுக்கள் இருந்தன. அவற்றில் கன்றுகள் போல் இருந்தனவும் ஈன்று பாலை சுரக்கத் தொடங்கி விட்டனவாம்' என்ற அர்த்தத்தை வைணவப் பெருந்தகைகள் கூறிச் சென்றுள்ளனர். ஆக அவ்வீட்டில், கன்று, கறவை என்ற இரண்டு வகையுமே பாலைச் சுரந்தன, சிறுவயதிலேயே ஞானத்தைப் பொழிகின்ற ஆச்சார்யர்களைப் போல!

அக்கோவலர் தம்/பிறர் தேவைக்காகவும், பசுக்களின் மடியில் பால் கட்டிக் கொண்டு அவை துன்புறக்கூடாது என்ற எண்ணத்திலும், அத்தனை பசுக்களிடமும் நிதம் பால் கறக்கும் கடுமையான தொழிலை மனமகிழ்வோடு செய்து வந்தார். அதோடு, (செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்) பகைவரை அவரது இருப்பிடத்திற்கே சென்று, வென்று அடக்கும் திறம் படைத்தவர் அவர்.

அட, பால் கறக்கும் ஆயருக்கு ஏது பகைவர் என்ற கேள்வி எழுவது நியாயமே! கண்ணனின் பகைவர் தான் ஆயர்பாடியில் வாழ்ந்த அனைவருக்கும் பகைவர்! அதனால் தான் நாச்சியார் பேர் எதுவும் கூறாமல், 'செற்றார்' என்று பொதுவாக பகைவரைக் குறிக்கிறார்.

அக்கோவலர் பகைவருடன் போரிட்டு அவர்தம் பலத்தையும், திறனையும் குன்றச் செய்து அவர்களை வெற்றி கொண்டாலும், அப்பகைவரை அழிப்பதில்லை. அதனாலேயே அவரை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்கிறாள் ஆண்டாள்!

அதோடு, அக்கோவலர், பக்தி, ஞான யோகங்களை கடைபிடிக்காத போதும், கர்ம யோகத்தில் சிறந்து விளங்குவதால், அதுவே பரமனுக்குப் போதுமானது என்பதை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்பதின் வாயிலாக ஆண்டாள் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.

அத்தகைய "குற்றமொன்றில்லாத கோவலர்" வீட்டில் பிறந்த பெண் "பொற்கொடி"யாகத் தானே இருக்க முடியும். கர்மயோகியின் மகளாகப் பிறந்த பெண் இப்படித் தூங்கலாமா என்று ஆண்டாள் விசனப்படுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதில்லையா :)

நேர வித்தியாசத்தைக் கூட, ஒரு பாசுரத்திலிருந்து அடுத்த பாசுரத்துக்குச் செல்கையில், ஆண்டாள் அழகாகக் குறிக்கிறாள். "எருமைச் சிறுவீடு மேய்வான பரந்தன காண்" என்று 8வது பாசுரத்தில் பாடிய கோதை, இப்பாசுரத்தில் அவற்றைக் கறக்கும் நேரம் நெருங்கி விட்டதை சொல்லி, உறங்குபவளை எழுப்புகிறாள்!

"புற்றரவல்குல் புனமயிலே" என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரமவைரி மயிலையும் துணைக்கழைத்ததில்(oxymoron போலத் தோன்றினாலும்!) ஆண்டாளின் கவிநயம் தெரிகிறதல்லவா! உறங்கும் அப்பெண்ணின் கூந்தல் பரந்து கிடப்பது, அழகான மயில் தோகை விரித்தாடுவதை போலுள்ளதாம். அதோடு, தனது இயல்பான இடமான வனத்தில் சுதந்திரமாக வசிக்கும் "புன"மயிலே மகிழ்ச்சியோடு இருக்கும்!

ஒரு வகையில், பொற்கொடி, புனமயில் போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம். அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்! மெல்லிய இயல்புடையவளாயினும், "புற்றரவல்குல்" (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள். அதாவது, "சிறுத்த இடை" என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!

இத்தனை விரிவாக (பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (பரமபக்தி, ஞானம், அடக்கம்..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.

மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்! மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா! மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(முற்றம் புகுந்து) முகில்வண்ணன் பேர் பாடப்பட்டது :-)

*****************************************
பாசுரச் சிறப்பு:

இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.

ஆண்டாள் "பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி" என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.

பொற்கொடி - பக்தி
அல்குல் - பரபக்தி
புனமயில் - பரம பக்தி


ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!


"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவதி பயங்கரம் அன்னங்கார்ச்சார்யார், 'நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக' அற்புதமாக அருளியிருக்கிறார்!

அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!

'முற்றம்' என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.

குலசேகரப் பெருமாள் அருளிய "
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்பமிகு பெருங்குழுவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே"

என்பதை நினைவு கூர வேண்டும்.

அப்பெண்ணின் (ஆயர் குல) உறவினர், கர்ம யோகத்தை (எண்ணற்ற பசுக்களை பராமரிப்பது, பால் கறப்பது, பகைவர்களிடமிருந்து தம் மக்களை பாதுகாப்பது) சிரத்தையாக கடைபிடிப்பவர்கள். அதாவது, கடமையைச் செய்வது, இறை சேவைக்கு ஒப்பானது என்று கோதை நாச்சியார் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்!

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து - புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய (அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - வேதங்களை சரியாக கற்காதவரையும், இறைநம்பிக்கையற்றவரையும், சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே - வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும் பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் - கோ என்றால் வாக்கு அல்லது வேதம்) கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து ஞானம் பெறும் கொடியாக (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.

புற்றரவு - ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?)
புனமயிலே - பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்
போதராய் - ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து - வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்
நின் முற்றம் புகுந்து - உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
முகில்வண்ணன் பேர் பாட - பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.

சிற்றாதே - அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்
பேசாதே - அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்
செல்வப் பெண்டாட்டி நீ - கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் - எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி, எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ
?

*************************************

இப்பாசுரம் பூதத்தாழ்வாருக்கு கோதை நாச்சியாரின் திருப்பள்ளியெழுச்சி என்று ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!

"குற்றமொன்றில்லாத கோவலர்" என்பது பூதத்தாருக்கு மிகவும் பொருந்தும், ஏனெனில் அவர் கருவிலிருந்து உருவான குறை கூட இல்லாமல், மலரிலிருந்து தோன்றியவர். ஏன், முதல் 3 ஆழ்வார்களுமே அயோனிஜர்கள் தான்!

"பொற்கொடியே" என்று பூதத்தாழ்வார் தனது திருவந்தாதியில் தன்னை அழைத்துக் கொண்டுள்ளார்
"தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்"
எம்பெருமான் என்ற கொம்பு மீது படரும் கொடியாக தன்னை வர்ணிக்கிறார் !

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து - இவ்வரியையும் பூதத்தாருடன் (முதல் 3 ஆழ்வார்களுடனேயே கூட) தொடர்புபடுத்த முடியும்.

பொய்கையாரின் முதல் திருவந்தாதி 'கறவை கணம்' என்றும், பூதத்தாழ்வாரின் 2வது திருவந்தாதி "கறவை கணங்கள்" என்றும், பேயாழ்வாரின் 3ஆம் திருவந்தாதி "கறவை கணங்கள் பல" என்றும் குறிப்பிடப்படுகின்றன!

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை விவாதங்களில் வென்று நல்வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்

பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* - எண்திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

புற்றரவல்குல் - மேலே சொன்னபடி அல்குல் = பரபக்தி.

பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது திருவந்தாதியை "அன்பில்" தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டியது.

முதல் பாசுரம்:

அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*
இன்புருகு சிந்தை இடுதிரியா,* - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ்புரிந்த நான்.


கடைசிப் பாசுரம்:

மாலே. நெடியானே.* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா.* வியன்துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-
அளவன்றால்* யானுடைய அன்பு.



ஞானம்,பக்தி,விரக்தி என்ற மூன்றில் பக்தி நடுவண் உள்ளது. அது போல, முதல் மூன்று ஆழ்வார்களில் பூதத்தார் நடு ஆழ்வார் !

சுற்றத்து தோழிமார் - பொய்கையாரும் பேயாழ்வாரும் பூதத்தாரின் உறவினர்! மற்ற ஆழ்வார்கள் தோழர்கள்!
முகில்வண்ணன் பேர் பாட - பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் "முகில் வண்ணன்" என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே :)


****************************************************
சில குறிப்புகள்:

கண்ணனின் நெருக்கத்தால், கோகுலத்தில் வாழ்ந்த பசுக்கள் பலகாலம் இளமையாகவே இருந்ததால், அவை மிகுந்த எண்ணிக்கையில் இருந்தன (கற்றுக் கறவைக் கணங்கள் பல!). அவற்றை அடையாளம் காண்பதும் மிகுந்த சிரமமாகவே இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தேவர்களில் பலர், பசுக்களாக உருவெடுத்து, கண்ணனுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டனராம் :)

அப்பசுக்களை தான் மாயக்கண்ணன் எத்தனை தடவை ஆபத்திலிருந்து காத்துள்ளான்!
அகாசுரன் பசுக்களை விழுங்க முயன்றபோது,
பிரம்மன் ஒரு முறை பசுக்களையும், ஆயர்களையும் சிறை பிடித்து ஒளித்து வைத்தபோது,
இந்திரன் ஒரு தடவை பெருமழையையும், காற்றையும் உருவாக்கி இன்னல் விளைவித்தபோது
என்று அவற்றை ரட்சித்து எத்தனை லீலைகள்!

செற்றார் திறல் அழிய - ஆயர்கள் பகைவர்களைக் கூட கொல்ல மாட்டார்கள். அவர்களின் பலமும் கர்வமும் அடங்குமாறு செய்வார்கள்

புற்றரவல் குல் புனமயிலே - ஆண்டாளுக்கு, பாம்பைப் பற்றிப் பேசியவுடன், அதன் பரம வைரியான தோகை மயிலின் ஞாபகம் வந்து விட்டது போலும் :) பொதுவாகவே, ஆச்சாரியனை மயிலுடன் ஒப்பிடும் வழக்கமிருந்தது.

புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆச்சார்யனை அண்டுவதில்லை.
மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆச்சார்யனும், தனது ஞானச்சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார்.
மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆச்சார்யனுக்கு மேக வண்ணனைப் பிடிக்கும் :)

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட -- வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, December 25, 2010

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10

திருப்பாவை பத்தாம் பாசுரம்

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!


பொருளுரை:

பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !



ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே ! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"

பாசுரக் குறிப்புகள்:

'பாவை நோன்பிருந்து கிருஷ்ணானுபவத்தில் திளைக்கலாம் என்று நேற்று கூறி விட்டு இன்று நாங்கள் மிக்க எதிர்பார்ப்புடன் உன் வீட்டு வாசலில் அதிகாலையில் காத்திருக்க, நீயோ கதவைக் கூட திறக்காமல் தனியாக சொர்க்கம் போக திட்டம் போட்டவள் போல தூங்கிக் கொண்டிருக்கிறாயே' என்று ஆண்டாள் விசனப்படுவதிலும் ஒரு நயம் இருக்கத் தானே செய்கிறது!

"சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" எனும்போது, கண்ணன் உறங்கும் பாகவதையின் வீட்டினுள்ளே இருக்கிறானோ என்ற ஐயம் தெரிகிறது. அதாவது, கண்ணன் இருக்கும் இடம் தானே கோபியர்க்கு சொர்க்கம்! சொர்க்கத்தில் இருப்பவள், வீட்டின் கதவைக் கூடத் திறக்காதவள், தங்களுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமுக்கமாக இருப்பது வெளியில் உள்ள கோபியருக்கு பொருமலை ஏற்படுத்துமா, இல்லையா!

"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்ற பிரயோகம் கண்ணன் வீட்டின் உள்ளே இருக்கிறானோ என்ற (வெளியில் காத்திருக்கும் கோபியரின்) சந்தேகத்தை வலுப்படுத்துவதாய் அமைந்துள்ளதை அவதானிக்க வேண்டும். அதாவது, துளசியின் வாசம் வீசும் இடத்தில் கண்ணன் வாசம் செய்கிறான் என்ற விஷயம் கோபியர் அறியாததில்லையே!

துளசிக்கு வைணவத்தில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. பாற்கடல் கடைந்த காலத்தில் பிறந்த துளசி தனக்கு மிகவும் உகந்தது என்று கண்ணனே அருளியிருக்கிறான். ஏன் விஷ்ணுசித்தர் ஆண்டாளை கண்டெடுத்ததே ஒரு துளசிச் செடியின் அடியில் தான்!

பெரும் தவம் செய்து பிரம்மனிடம் "நித்தியத்துவத்தை" வரமாக கேட்க நினைத்த கும்பகரணன், (கலைவாணியின் திருவிளையாடலால்) நாக்கு குளறி "நித்திரத்துவத்தை" வரமாக கேட்டு விட, தன் வாழ்வின் பெரும்பகுதியை தூக்கத்தில் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனுக்கு அது துர்பாக்கியம், தேவர்களுக்கோ அவன் உறக்கத்திலிருந்ததே பெரும்பாக்கியம்!

ஆக, சற்று எரிச்சலில் தான் வெளியில் இருக்கும் கோபியர், 'கும்பகரணனையே உறங்குவதில் தோற்கடித்து, அவனது பெருந்துயிலையே பரிசாகப் பெற்றவள் போல தூங்குகிறாயே' என்று தூங்குபவளை இடித்துரைத்தனர்.

நாற்றத்துழாய் முடி நாராயணன் என்று கண்ணனின் வெளித் தோற்றத்தழகை பாடிய ஆண்டாள், அதே நாராயணன் தான் ஸ்ரீராமன் எனும்போது, ராமனே புண்ணியத்தின் மொத்த வடிவம் என்று போற்றுவதை (போற்றப் பறை தரும் புண்ணியனால்) கவனிக்க வேண்டும்! "ராமோ தர்மவான் விக்ரஹ" என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

'நமது நற்பலன்களால் மட்டுமே மோட்சம் சித்திக்காது, நம்மை ரட்சிப்பதும், தடுத்தாட்கொள்வதும் அப்புண்யனின் பெருங்கருணையே' என்பதை கோதை நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதனால் தான் வெளியில் நிற்கும் கோபியர் "பரமனை எப்படிப் பற்றுவது" என்று துடிக்கையில், உள்ளிருப்பவளால் (எல்லாவற்றையும் கண்ணனிடம் ஒப்படைத்து விட்டு!) நிச்சிந்தையாக தூங்க முடிகிறது போலும் :)

பரமனை அடைவது மோட்சமானாலும், அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் என்பது தான் இப்பாசுரத்தின் அடிநாதமான செய்தி.

"கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்" என்ற பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். ஆண்டாள் புண்ணியனான ராமன் அவ்வசுரனை வதம் செய்தான் என்று பாடவில்லை! மற்ற அசுரர்கள் தாங்கள் போரிடுவது பரமனோடு என்பதை உணரவில்லை. ஆனால் கும்பகரணனோ அது அறிந்தே (செஞ்சோற்றுக் கடனுக்காக!) ராமனுடன் பெரும்போரிட்டு மரணத்தைத் தழுவினான்! கும்பகரணன் கூற்றத்தின் வாயில் வீழ்ந்தாலும், பரமன் அவனுக்கு மோட்சம் அளித்தான்.

அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய் - 'பெண்ணே, நீ கிடைத்தற்கரிய ஆபரணம் போல் அழகானவள். அதனால், தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறக்காமல், முக ஒளி பிரகாசிக்க (தேஜஸாய்) கதவைத் திறந்து கொண்டு வா' என்று கொள்வது ஒரு வகை! "நீ தூங்கி வழியும் முகத்தோடு வந்தால் கூட, (தேற்றமாய்) தேஜஸாய் தான் இருப்பாய், உடனே கதவைத் திற" என்று கொள்வதும் நயம் தான்!
**********************************

நான் ஏற்கனவே புள்ளும் சிலம்பின காண் என்ற 6வது திருப்பாவைப் பாசுரப் பதிவில் சொல்லியபடி, 6வது பாசுரம் தொடங்கி 15வது வரை உள்ள பத்து பாசுரங்கள் முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை.

இவை பத்து ஆழ்வார்களை (மதுரகவியாழ்வார், ஆண்டாள் தவிர்த்து) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகம் உண்டு ! மதுரகவியார் நம்மாழ்வருக்குள் அடக்கம் என்பதால் அவரை தனியாக துயிலெழுப்ப ஆண்டாள் நாச்சியார் துணியவில்லை :-)
இந்த 10 திருப்பாவைப் பாசுரங்களும் (6-15) ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது! தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, தனக்குப் பின்னால் அவதரிக்கவிருக்கும் 3 ஆழ்வார்களின் (தொண்டரடிபொடி, திருமங்கை, திருப்பாணாழ்வார்) திருப்பள்ளியெழுச்சிக்கும் சேர்த்தே ஆண்டாள் நாச்சியார் திருப்பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிட வேண்டியது.

பாசுரச் சிறப்பு:

இப்பாசுரம் முதலாழ்வர்களில் முதலாவதாக வரும் பேயாழ்வாரை துயிலெழுப்புவதாக ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!

திருக்கோவலூர் கோயிலை அடைந்த முதல் மூன்றாழ்வார்களில், பொய்கையாரும், பூதத்தாரும் பெருமாளுக்கு இரு விளக்குகளை ஏற்றினர். இதை நோன்பு நோற்பதாக (நோற்று!) கொண்டால், உபய அனுஷ்டானம் செய்யப்பட்டு விட்டதல்லவா?

முதலடியிலேயே ஆண்டாள் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" என்று விளிப்பதைப் பாருங்கள். பேயாழ்வார் தனது திருவந்தாதியை பாடுவதற்கு முன்பாகவே, பெருமாளின் திவ்ய தரிசனத்தை காணும் பெரும்பேறு பெற்றவர். அவ்வாழ்வாரின் முதல் பாசுரத் தொடக்கமே, "திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று தொடங்குவதாம்!

அது போலவே, திருக்கோவலூர் கோயிலில் முதலில் நுழைந்த பொய்கையார் கதவை மூடி விட்டார். பின் வந்த பூதத்தாருக்கு அவர் கதவைத் திறந்தார். கடைசியாக வந்த பேயாழ்வாருக்கு பூதத்தார் கதவைத் திறந்து விட்டார். ஆனால், பேயாழ்வாருக்கு அடியவர் வேறொருவருக்கு கதவைத் திறக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, "வாசல் திறவாதார்" என்ற சொற்பதம் பேயாழ்வாருக்கு மிக மிகப் பொருத்தமான ஒன்றே :-)

"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்பது இந்த ஒரு பாசுரத்தில் மட்டுமே ஆண்டாள் எடுத்தாண்டுள்ளார். ஏனெனில், பேயாழ்வாருக்கு திருத்துளசி மேல் பெருங்காதலுண்டு! திருத்துழாயை தனது பல பாசுரங்களில் அவர் பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தவர்.

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,*அன்று திருக்கண்டு கொண்ட* திருமாலே

மலராள் தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,

மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,* கண்ணனையே காண்க

அரும்பும் புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,* மனம்துழாய் மாலாய்

தண்துழாய்த் தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும்


திருமழிசை பிரானை துயிலெழுப்பும் முந்தைய (9வது) பாசுரத்தில், ஆண்டாள் அவர் "அனந்தலோ?" என்று ஐயம் கொள்கிறாள். இதில் "ஆற்ற அனந்தலுடையாய்" என்று சொல்வதை வைத்து, திருமழிசையாரின் ஆச்சார்யனான பேயாழ்வாரையே இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் என்பதும் ஏற்புடையதே!

அது போல, "அருங்கலமே" என்று பேயாழ்வாரை அழைப்பதும் ஏற்புடையதே! பெருமானின் திவ்ய தரிசனத்தை பிரபந்தம் பாடத் தொடங்கும் (திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்!) கணத்திலேயே அனுபவிக்கப் பெற்ற பேயாழ்வார் கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவர் தானே, இதிலென்ன சந்தேகம்!

குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் பெரிய நம்பியை (பராங்குச தாசர்) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகமும் உண்டு. பெரிய நம்பி உடையவரின் ஆச்சார்யன் ஆவார்.


பாசுர உள்ளுரை:

பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).

இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.

இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபியர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!

(அவளுக்கு மட்டுமே ஆனந்தம் தரும்!) அவளது ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து தங்களது அகங்காரத்தையும், அஞ்ஞானத்தையும் விலக்கி, நல்வழி செலுத்தி,தங்களது உய்வுக்கு உதவுமாறு, கோபியர், உறங்கும் (ஞானமிக்க) அடியவளை வேண்டுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.

மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்
அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?

அருங்கலமே என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்

அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.


என்றென்றும் அன்புடன்
பாலா

***491***
பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்

Related Posts with Thumbnails

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!